NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தூக்கத்திலேயே ஷாப்பிங் செய்து 3 லட்சம் ருபாய் வரை கடனாளியாக மாறிய இங்கிலாந்து பெண்மணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தூக்கத்திலேயே ஷாப்பிங் செய்து 3 லட்சம் ருபாய் வரை கடனாளியாக மாறிய இங்கிலாந்து பெண்மணி
    நிப்ஸ்-இற்கு 2018 இல் இந்த நிலை கண்டறியப்பட்டது

    தூக்கத்திலேயே ஷாப்பிங் செய்து 3 லட்சம் ருபாய் வரை கடனாளியாக மாறிய இங்கிலாந்து பெண்மணி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 05, 2024
    05:04 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்தைச் சேர்ந்த கெல்லி நிப்ஸ் என்ற 42 வயது பெண்மணி, பாராசோம்னியா எனப்படும் அரிய தூக்கக் கோளாறு காரணமாக $3,800 (₹3,16,536) அளவிற்கு கடனாளியாகியுள்ளார், அவர் அறியாமலே!

    நிப்ஸ் தூங்கும் போது ஆன்லைன் ஷாப்பிங் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.

    நிப்ஸ்-இற்கு 2018 இல் இந்த நிலை கண்டறியப்பட்டது.

    "இரவு உறங்கச் செல்வதை நினைத்தாலே, மிகவும் வருத்தமாகவும், வெறுப்பாகவும் இருக்கிறது. இரவில் என்னை அறியாமல் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் சவுத் வெஸ்ட் நியூஸ் சர்வீஸ் நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டார்.

    தூக்கத்தில் ஷாப்பிங்

    சுயநினைவற்ற ஷாப்பிங் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்

    முழு அளவிலான பிளாஸ்டிக் கூடைப்பந்து மைதானம், பெயிண்ட் டின்கள், புத்தகங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஹரிபோ மிட்டாய்கள் உட்பட பல அவர் வீட்டு வாசலை அடைந்த போதுதான், தூங்கும் போது அவர் ஆர்டர் செய்ததை அவர் கண்டறிந்துள்ளார்.

    இதனால் பல்வேறு இடங்களில் கடனை குவித்ததை நிப்ஸ் ஒப்புக்கொண்டார்.

    அவரது கிரெடிட் கார்டு விவரங்கள், அவரது மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால், இந்த 'சுயநினைவில்லாமல் ஷாப்பிங்' அனுபவத்தை அவருக்கு தந்தது.

    அதுமட்டுமின்றி, அவர் உறங்கிக் கொண்டிருக்கும்போது, ​​அவள் அறியாமல் தன் நிதித் தகவலை மோசடி செய்பவர்களுடன் குறுஞ்செய்தி மூலம் பகிர்ந்துகொண்டதால், அவளுடைய வங்கிக் கணக்கில் இருந்து $317 (₹26,413) எடுக்கப்பட்டுள்ளது.

    பொருளாதார பாதுகாப்பு

    வங்கி மோசடி முயற்சிகள், தூக்கத்தில் ஷாப்பிங் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு

    மோசடி செய்பவர்களுடன் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நிப்ஸ் தனது வங்கி கணக்குகளில் பல மோசடி முயற்சிகளை அனுபவித்ததாக கூறினார்.

    எனினும் அவரது வங்கி இந்த பரிவர்த்தனைகளைத் தடுத்தது.

    ஆனால் பாதுகாப்புக் காரணங்களால் அவர் பலமுறை தனது கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது.

    தனது வங்கியில் இருந்து பலர் பணம் எடுக்க முயன்றதாக அவர் தெரிவித்தார்.

    இறுதியில் அவர் கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை செலுத்திய போதிலும், நிதி நெருக்கடி மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவை அவருக்கு தொடர்ந்து கவலையை ஏற்படுத்துகின்றன.

    பாதுகாப்பு கவலைகள்

    பராசோம்னியா ஆபத்தான நடத்தைகளுக்கு வழிவகுக்கிறது

    நிப்ஸ்-இன் இந்த நிலை தீவிரமடையவே, அவர் அளவிற்கு அதிகமாக நீரிழிவு நோய்க்கான மருந்தை உட்கொள்வதும், ஜன்னல்கள் மற்றும் அரை கதவுகளைத் திறந்து வைத்திருப்பது என இறுதியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இத்தனை சவால்கள் இருந்தபோதிலும், இது அவர் சமாளிக்க வேண்டிய ஒன்று என்பதை ஒப்புக்கொண்டு, அதனுடன் வாழ தயாராகிவிட்டதாக கூறுகிறார்.

    அவளது நிலையால் சிரமங்கள் இருந்தாலும், தற்போது அவர் தன் குழந்தைகளின் மீது கவனம் செலுத்துகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூக்கம்
    இங்கிலாந்து
    ஆன்லைன் வணிகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தூக்கம்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை வைரஸ்
    மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா? ஆரோக்கியம்
    மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது? முதியோர் பராமரிப்பு
    30-50 வயதுக்குட்பட்டோர் குறைவான நேரம் தூங்குகிறார்கள் -புதிய ஆய்வின் ரிப்போர்ட் முதியோர் நலம்

    இங்கிலாந்து

    ஐநா மனித உரிமைகள் அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குநர் ராஜினாமா இஸ்ரேல்
    AUSvsENG : இங்கிலாந்து அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா  ஆஸ்திரேலியா
    AUSvsENG : 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா  ஆஸ்திரேலியா
    ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன? இஸ்ரேல்

    ஆன்லைன் வணிகம்

    இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபேஷன் கடையான 'பஜார்' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான் அமேசான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025