NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மாலத்தீவுக்கு மீண்டும் விமான முன்பதிவுகளை தொடங்கியது ஈஸ்மைடிரிப் பயண நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாலத்தீவுக்கு மீண்டும் விமான முன்பதிவுகளை தொடங்கியது ஈஸ்மைடிரிப் பயண நிறுவனம்
    மாலத்தீவுக்கு மீண்டும் விமான முன்பதிவுகளை தொடங்கியது இந்திய பயண நிறுவனம்

    மாலத்தீவுக்கு மீண்டும் விமான முன்பதிவுகளை தொடங்கியது ஈஸ்மைடிரிப் பயண நிறுவனம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 07, 2024
    02:22 pm

    செய்தி முன்னோட்டம்

    பயண தொழில்நுட்ப தளமான ஈஸ்மைடிரிப் (EaseMyTrip) மாலத்தீவிற்கு விமான முன்பதிவுகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

    இது இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

    முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்திற்குப் பிறகு, மூன்று மாலத்தீவு அமைச்சர்கள் அவரைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்ட பிறகு ஏற்பட்ட ராஜாங்க ரீதியிலான மோதலைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் இந்த முன்பதிவுகளை நிறுவனம் இடைநிறுத்தியது.

    ஈஸ்மைடிரிப் தலைமை நிர்வாக அதிகாரி நிஷாந்த் பிட்டி, இந்தியா-மாலத்தீவு இராஜதந்திர உறவுகளில் சாதகமான முன்னேற்றங்களை மேற்கோள் காட்டி, முன்பதிவுகளை மீண்டும் தொடங்கும் முடிவை உறுதிப்படுத்தினார்.

    பின்னணி

    மீண்டும் முன்பதிவைத் தொடங்கும் முடிவின் பின்னணி

    மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் பிரதிநிதிகள் சமீபத்தில் இந்தியா வந்தபோது அவர்களுடன் மேற்கொண்ட ஆக்கபூர்வமான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

    "நாட்டின் முதல் நிறுவனமாக இருப்பதால், நாங்கள் எப்போதும் எங்கள் அரசாங்கத்துடன் ஒத்துப்போகிறோம் மற்றும் அவர்களின் பார்வைக்கு ஆதரவளிக்கிறோம்." என்று பிட்டி கூறினார்.

    சுற்றுலா மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

    சீனாவுக்கு சார்பானவர் என அறியப்படும் முகமது முய்சு கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராக பதவியேற்றதில் இருந்தே, இரு நாட்டு உறவுகளும் மோசமடைந்தது.

    எனினும், கடந்த சில மாதங்களாக உறவை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுடன் இணக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    இந்தியா
    சுற்றுலா
    விமான சேவைகள்

    சமீபத்திய

    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்

    மாலத்தீவு

    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லட்சத்தீவு
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா
    மாலத்தீவுக்கான முன்பதிவுகளை நிறுத்திய இந்திய நிறுவனத்திடம் மாலத்தீவு சுற்றுலா அமைப்பு வேண்டுகோள் இந்தியா

    இந்தியா

    வாரத்தின் முதல் நாளில் வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றிய சைபர் மோசடி கும்பல்ல; ரூ.7 கோடியை இழந்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் சைபர் கிரைம்
    காந்தி ஜெயந்தி 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் மகாத்மா காந்தி
    வருமான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு வருமான வரி அறிவிப்பு

    சுற்றுலா

    அஜர்பைஜான் எப்படி பலருக்கும் விருப்பமான சுற்றுலாதலமாக மாறியது? அஜர்பைஜான்
    உலகிலேயே மலிவான ஹோட்டல் அறைகளைக் கொண்ட 8 சுற்றுலா தலங்கள் பயணம்
    இந்தியா உட்பட பல நாடுகளின் சுற்றுப்பயணிகளுக்காக ஜப்பானில் இ-விசா சேவை அறிமுகம் ஜப்பான்
    சஃபாரி செல்லும்போது நீங்கள் எடுத்துச்செல்லவேண்டிய அத்தியாவசியங்கள் இவைதான் பயணம் மற்றும் சுற்றுலா

    விமான சேவைகள்

    பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம்  ஏர் இந்தியா
    அயோத்தியாவிற்கு சென்னையிலிருந்து நேரடி விமான சேவை துவக்கம் விமானம்
    கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திற்கான ஏலத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனர் அஜய் சிங் பங்கெடுப்பு ஸ்பைஸ்ஜெட்
    வீல் சேர் இல்லாமல் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம் ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025