Page Loader
பியூட்டி டிப்ஸ்: தினசரி ஐ-கிரீம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
உங்கள் தினசரி சரும பராமரிப்பு வழக்கத்தில் கண் கிரீம் சேர்ப்பதனால் கிடைக்கும் நன்மைகள் பல

பியூட்டி டிப்ஸ்: தினசரி ஐ-கிரீம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 31, 2024
06:33 pm

செய்தி முன்னோட்டம்

Eye Cream அல்லது கண் கிரீம்கள் என்பது உங்கள் உணர்திறன் வாய்ந்த கண் பகுதியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஹைட்ரேட்டிங் அழகு சிகிச்சைகள் ஆகும். கண்களின் தோற்றம் உங்கள் வயது, மன அழுத்தம் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஆரம்ப பகுதிகளில் ஒன்றாகும். கண்களுக்குக் கீழே உள்ள மென்மையான பகுதியை ஊட்டமேற்றவும், பாதுகாக்கவும் மற்றும் புத்துயிர் பெறவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு சிகிச்சையாக இந்த கண் கிரீம் கருதப்படுகிறது. உங்கள் தினசரி சரும பராமரிப்பு வழக்கத்தில் கண் கிரீம் சேர்ப்பதனால் கிடைக்கும் நன்மைகள் பல.

நன்மைகள்

ஐ கிரீமின் நன்மைகள் 

கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை குறைக்கவும், வீக்கத்தினை குறைக்கவும் உதவுகிறது. வீங்கிய, சோர்வாக தோற்றமளிக்கும் கண்களாக இருந்தால், கண் க்ரீமைச் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். சோடியம் அஸ்கார்பேட் அல்லது வைட்டமின் சி கொண்ட கண் கிரீம்களைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் கண்களுக்கு கீழ் இருக்கும் சருமத்திற்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஈரப்பதத்தை அளிக்கிறது. இதனால், மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் கணிசமாக குறைகிறது. சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்குகிறது. பொதுவாக ஐ க்ரீம்கள், ஹைலூரோனிக் அமிலம், கிளிசரின் மற்றும் செராமைடுகள் போன்ற ஈரப்பதமூட்டும் பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. அவை ஈரப்பதத்தை மீட்டெடுக்கவும், நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், சருமத்தின் இயற்கையான மீட்டெடுக்கவும் உதவுகின்றன.