NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு 
    அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு

    அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு 

    எழுதியவர் Nivetha P
    Dec 01, 2023
    05:25 pm

    செய்தி முன்னோட்டம்

    பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த கௌதம் குமார்(26), எம்.ஏ. எம்.ஃபில் முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியாற்றி வந்துள்ளார்.

    சுமார் ஒருவருட காலமாக இவர் திருமணம் செய்ய பெண் தேடியும் அமையவில்லையாம்.

    இதனிடையே இவர் அரசு பணி பெறுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்த பீகார் அரசு தேர்வாணைய தேர்வு எழுதிய இவர், அதில் தேர்வுப்பெற்றுள்ளார்.

    ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் பணியும் இவருக்கு கிடைத்துள்ளது.

    அதற்கான பணிநியமன ஆணையினை வாங்கி வருவதாக தனது பெற்றோரிடம் மகிழ்ச்சியுடன் கூறிவிட்டு கடந்த புதன்கிழமை சென்றுள்ளார்.

    ஆனால் அவர் வீடு திரும்பவில்லை, அவரது மொபைல் போனும் அணைக்கப்பட்டிருந்தது.

    இதனால் அவரது பெற்றோர் அச்சமுற்று காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.

    அதன்பேரில் காவல்துறையினரும் அவரை தேடி கண்டுபிடித்துள்ளனர்.

    திருமணம் 

    கட்டாய திருமணம் என்னும் பிரிவில் வழக்குப்பதிவு

    காவல்துறையினர் அவரை பார்த்தப்பொழுது திருமண கோலத்தில் இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அவரிடம் விசாரிக்கையில், தன்னை பெண்ணின் தந்தை துப்பாக்கி முனையில் வைத்து கட்டாயப்படுத்தி தாலி கட்ட சொல்லியதாக அவர் கூறியுள்ளார்.

    இதனையடுத்து போலீசார் பெண்னின் தந்தையான ராகேஷ் ராயிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது அவர், தனது மகளுக்கு ஒரு அரசு பணியில் இருக்கும் மாப்பிள்ளையை கட்டி வைக்க வேண்டும் என்று சிறுவயது முதலே ஆசைப்பட்டதாகவும்,

    எனவே கௌதம் குமாரை கடத்தி வந்து துப்பாக்கி முனையில் வைத்து தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து தற்போது கட்டாய திருமணம் என்னும் பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை,

    இந்த திருமணம் செல்லுமா இல்லையா? என்பதை நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்று கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பீகார்
    காவல்துறை
    காவல்துறை
    தேர்வு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    பீகார்

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் இந்தியா
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா
    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    காவல்துறை

    டெல்லியில் போலி மருத்துவர்களால் மரணமடைந்த நோயாளிகள் - பகீர் தகவல் மருத்துவமனை
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு  மத்திய பிரதேசம்
    ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ வைரல் செய்தி
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம் தூத்துக்குடி

    காவல்துறை

    விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம்  குண்டர் சட்டம்
    மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை  காவல்துறை
    ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி ராஜஸ்தான்
    விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்  ஆந்திரா

    தேர்வு

    பொது வினாத்தாள் முறை: 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடக்கம் பள்ளி மாணவர்கள்
    தொடரும் NEET தற்கொலைகள்: கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை ராஜஸ்தான்
    டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது  மாற்றுத்திறனாளி
    சென்னை பல்கலைக்கழகம் - ஆன்லைனில் பி.காம், பிபிஏ இளநிலை கல்வி சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025