NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / WFI பிரச்சனை: மல்யுத்த வீரர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    WFI பிரச்சனை: மல்யுத்த வீரர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது
    மல்யுத்த வீரர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    WFI பிரச்சனை: மல்யுத்த வீரர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது

    எழுதியவர் Sindhuja SM
    Apr 28, 2023
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக FIR பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(ஏப்-28) விசாரிக்க இருக்கிறது.

    செவ்வாயன்று, மல்யுத்த வீராங்கனைகளின் மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    மல்யுத்த வீரர்கள் இது குறித்து டெல்லி காவல்துறையில் புகார் அளித்த போதிலும், டெல்லி காவல்துறை FIR பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால், உச்ச நீதிமன்றத்தை அணுகிய 7 மல்யுத்த வீராங்கனைகள் FIR பதிவு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

    DETAILS

    புகார் அளித்த போதிலும், டெல்லி காவல்துறை FIR  பதிவு செய்யவில்லை

    தலைசிறந்த மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லியில் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    மல்யுத்த வீரர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    பாஜக தலைவரான பிரிஜ் பூஷன் ஷரண் சிங், தற்போது, பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருவதாகவும் லஞ்சம் வழங்க முயற்சிப்பதாகவும் மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஹரியானா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், இது இன்னும் பெரிய போராட்டமாக மாறி இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி

    சமீபத்திய

    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி

    இந்தியா

    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது ஆம் ஆத்மி
    இந்தியாவின் முதல் கிராமமானது உத்தரகாண்டின் 'மனா' உத்தரகாண்ட்
    நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் நிறுத்தம் - அதிரடி காட்டிய மாவட்ட கலெக்டர்!  தனுஷ்
    இணையப் பாதுகாப்பில் இந்தியாவைப் பின்பற்றிய ஐரோப்பிய ஒன்றியம்.. மத்திய அமைச்சர் கருத்து!  சமூக வலைத்தளம்

    டெல்லி

    ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது இந்தியா
    தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு நாடாளுமன்றம்
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு விழுப்புரம்
    மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025