NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புழல் சிறையில் புத்தக கண்காட்சி - திறந்து வைத்த கவிஞர் வைரமுத்து! 
    புழல் சிறையில் புத்தக கண்காட்சி - திறந்து வைத்த கவிஞர் வைரமுத்து! 
    இந்தியா

    புழல் சிறையில் புத்தக கண்காட்சி - திறந்து வைத்த கவிஞர் வைரமுத்து! 

    எழுதியவர் Siranjeevi
    April 24, 2023 | 03:57 pm 1 நிமிட வாசிப்பு
    புழல் சிறையில் புத்தக கண்காட்சி - திறந்து வைத்த கவிஞர் வைரமுத்து! 
    சென்னை புழல் சிறையில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார் வைரமுத்து

    சென்னை புழல் மத்திய சிறையில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து, கைதிகளுக்கு அறிவுரை வழங்கினார் கவிஞர் வைரமுத்து. தமிழகத்தில் 9 இடங்களில் மத்திய சிறைகள் செயல்படுகின்றன. கைதிகளின் மன அழுத்தத்தை போக்கவும், நல்வழிப்படுத்தவும் புத்தகத்தை வழங்க புதிய டிஜிபி அம்ரேஸ் புஜாரி முடிவு செய்தார். இந்த நிலையில், புத்தக கண்காட்சி அமைத்து சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் பலனாக பல அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் அனைவரும் புத்தகங்களை வழங்கினார்கள். இதனால், 34, 232 புத்தகங்கள் சிறை நூலகங்களுக்கு தானமாக கிடைக்கப்பெற்றது.

    புழல் மத்திய சிறையில் புத்தக கண்காட்சி தொடக்கம் - கவிஞர் வைரமுத்து பங்கேற்பு

    அவை தலைப்பு வாரியாக பிரிக்கப்பட்டு தமிழகம் முழுவது உள்ள சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, உலக புத்தக தினத்தில் மத்திய சிறை 1 இல் புத்தக கண்காட்சி திருவிழா நடைப்பெற்றது. வைரமுத்து கலந்துகொண்டு பேசுகையில், நெல்சன் மண்டேலா, நேரு மற்றும் காந்தி என பலர் தலைவர்களாகி சிறைக்கு வந்தார்கள். நீங்கள் தலைவர்களாகி சிறைக்கு வெளியே செல்லுங்கள். தமிழ் சிந்தனையை உங்கள் மனதில் விதைத்துள்ளேன். நீங்கள் மரமாக வளர்வீர்கள் என்று நம்புகிறேன். எனவே சிறைவாசிகளிடம் பேசியது மகிழ்ச்சியை தருகிறது எனத்தெரிவித்துள்ளார். இந்த விழாவில் சிறைத்துறை துணைத்தலைவர் கனகராஜ், முருகேசன் மற்றும் தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி கலந்துகொண்டனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    புத்தக கண்காட்சி

    தமிழ்நாடு

    கையில் பாம்புடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை அலற விட்ட நெல்லை பெண்! காரணம் என்ன? திருநெல்வேலி
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை கொடைக்கானல்
    ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி!  கடலூர்
    திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு NO : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு  தமிழ்நாடு செய்தி

    புத்தக கண்காட்சி

    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு  தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023