NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புழல் சிறையில் புத்தக கண்காட்சி - திறந்து வைத்த கவிஞர் வைரமுத்து! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புழல் சிறையில் புத்தக கண்காட்சி - திறந்து வைத்த கவிஞர் வைரமுத்து! 
    சென்னை புழல் சிறையில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார் வைரமுத்து

    புழல் சிறையில் புத்தக கண்காட்சி - திறந்து வைத்த கவிஞர் வைரமுத்து! 

    எழுதியவர் Siranjeevi
    Apr 24, 2023
    03:57 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை புழல் மத்திய சிறையில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து, கைதிகளுக்கு அறிவுரை வழங்கினார் கவிஞர் வைரமுத்து.

    தமிழகத்தில் 9 இடங்களில் மத்திய சிறைகள் செயல்படுகின்றன. கைதிகளின் மன அழுத்தத்தை போக்கவும், நல்வழிப்படுத்தவும் புத்தகத்தை வழங்க புதிய டிஜிபி அம்ரேஸ் புஜாரி முடிவு செய்தார்.

    இந்த நிலையில், புத்தக கண்காட்சி அமைத்து சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதன் பலனாக பல அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் அனைவரும் புத்தகங்களை வழங்கினார்கள்.

    இதனால், 34, 232 புத்தகங்கள் சிறை நூலகங்களுக்கு தானமாக கிடைக்கப்பெற்றது.

    சென்னை மத்திய சிறைச்சாலை

    புழல் மத்திய சிறையில் புத்தக கண்காட்சி தொடக்கம் - கவிஞர் வைரமுத்து பங்கேற்பு

    அவை தலைப்பு வாரியாக பிரிக்கப்பட்டு தமிழகம் முழுவது உள்ள சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனிடையே, உலக புத்தக தினத்தில் மத்திய சிறை 1 இல் புத்தக கண்காட்சி திருவிழா நடைப்பெற்றது.

    வைரமுத்து கலந்துகொண்டு பேசுகையில், நெல்சன் மண்டேலா, நேரு மற்றும் காந்தி என பலர் தலைவர்களாகி சிறைக்கு வந்தார்கள்.

    நீங்கள் தலைவர்களாகி சிறைக்கு வெளியே செல்லுங்கள். தமிழ் சிந்தனையை உங்கள் மனதில் விதைத்துள்ளேன். நீங்கள் மரமாக வளர்வீர்கள் என்று நம்புகிறேன்.

    எனவே சிறைவாசிகளிடம் பேசியது மகிழ்ச்சியை தருகிறது எனத்தெரிவித்துள்ளார்.

    இந்த விழாவில் சிறைத்துறை துணைத்தலைவர் கனகராஜ், முருகேசன் மற்றும் தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி கலந்துகொண்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    சென்னை மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி  உதயநிதி ஸ்டாலின்
    3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள்  கோவில்கள்
    குப்பைகள் நிரம்பி வழியும் தஞ்சை அகழி - தொற்று நோய் பரவும் அபாயம்  தஞ்சை பெரிய கோவில்
    சமயபுர மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்  திருச்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025