NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமாக கருதக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமாக கருதக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் 
    பெண் உரிமை ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீதான கிரிமினல் வழக்கையும் கேரள நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமாக கருதக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 06, 2023
    11:45 am

    செய்தி முன்னோட்டம்

    ஒரு பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமானதாகவோ, அநாகரீகமானதாகவோ பாலியல் ரீதியிலோ சித்தரிக்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் நேற்று(ஜூன்-5) தெரிவித்தது.

    மேலும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்(போக்சோ) சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட பெண் உரிமை ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீதான கிரிமினல் வழக்கையும் கேரள நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    ரெஹானா பாத்திமா(33) மேலாடையின்றி தனது குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

    அந்த வீடியோவில், பாத்திமாவின் குழந்தைகள் அவரது அரை நிர்வாண உடலில் வண்ணம் தீட்டி கொண்டிருந்தனர்.

    "பாடி ஆர்ட் அண்ட் பாலிடிக்ஸ்" என்று ஹேஷ்டேக் இடப்பட்டிருந்த அந்த வீடியோ பெண் நிர்வாணம் பற்றிய சமூக செய்தியை பரப்ப பகிரப்பட்டதாகும். ஆனால், அந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

    details

    பாத்திமாவின் வழக்கை ரத்து செய்த பிறகு நீதிமன்றம் கூறியதாவது:

    ஒரு பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமானதாகவோ, அநாகரீகமானதாகவோ பாலியல் ரீதியிலோ சித்தரிக்கக் கூடாது.

    இங்குள்ள சூழலில், மனுதாரர் தனது அரசியல் கண்ணோட்டத்தை வெளிப்படுத்த நிர்வாணத்தை பயன்படுத்தி இருக்கிறார். அவரது குழந்தைகள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

    மேலும், அவரது உடலில் பூசி இருந்த வண்ணங்கள் அவரது மார்பை மறைத்திருந்தது. மனுதாரர் தனது வெற்று மார்பைக் காட்டவில்லை.

    எனவே, அந்த வீடியோவினால் ஒருபோதும் பாலியல் உணர்வைத் தூண்ட முடியாது.

    தாய்-குழந்தை உறவு என்பது பூமியின் மிகவும் புனிதமான உறவுகளில் ஒன்றாகும். தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள உறவைவிட வலுவான பந்தம் எதுவுமில்லை.

    பாத்திமா மீது வழக்குத் தொடுப்பது அந்த குழந்தைகளைத் தான் பாதிக்கும். எனவே, பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி, வழக்கை தொடர அனுமதிக்க முடியாது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    NCERT பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட தலைப்புகளின் விவரங்கள்  பள்ளி மாணவர்கள்
    இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு பிரதமர் மோடி
    கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான்.. எப்போது துவக்கம்? கர்நாடகா
    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025