NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் குறையும் ஸ்டார்ட்அப் முதலீடுகள்.. ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் குறையும் ஸ்டார்ட்அப் முதலீடுகள்.. ஏன்?
    ஸ்டார்ட்அப்களில் குறையும் முதலீடுகள்

    இந்தியாவில் குறையும் ஸ்டார்ட்அப் முதலீடுகள்.. ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 05, 2023
    12:14 pm

    செய்தி முன்னோட்டம்

    2021-ம் ஆண்டை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பொற்காலம் என்று தான் கூறவேண்டும். கொரோனா காலத்தில், பெரும்பாலான செயல்களில் மக்கள் ஆன்லைன் மூலம் செய்யப் பழகியிருந்தனர். எனவே, டெக் ஸ்டார்அப்களில் அப்போது அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது.

    ஆனால், அதனைத் தொடர்ந்து பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கூறி ஸ்டார்ட்அப்களின் மீதான முதலீட்டைத் குறைக்கத் தொடங்கின் முதலீட்டு நிறுவனங்கள்.

    மேலும், முதலீடுகள் குறைந்ததோடு, ஸ்டார்ட்அப்களின் மதிப்பும் குறையத் தொடங்கியது. பல்வேறு முதலீட்டு நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களின் மதிப்பைக் குறைத்து முதலீடு செய்யக் கோரின.

    2021-ன் நான்காம் காலாண்டில் 187 பில்லியன் டாலர்கள் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டில் முதல் காலாண்டில் இருந்து ஸ்டார்அப்களின் மீதான முதலீடு குறையத் தொடங்கி, தற்போது அந்தநிலை தொடர்கிறது.

    இந்தியா

    இந்திய ஸ்டார்ட்அப்களின் நிலை: 

    2021-ல் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 30 பில்லியன் டாலர்கள் முதலீட்டை ஈர்த்தன. இதுவே 2022-ம் ஆண்டு 20 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது.

    தற்போது 2023-ம் ஆண்டின் முதல் காலாண்டில் வெறும் 2 பில்லியன் டாலர்கள் முதலீட்டை மட்டுமே இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஈர்த்திருக்கின்றன.

    இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 75% குறைவு. இந்த ஆண்டு இறுத்திக்குள் 10 பில்லியன் டாலர்களை முதலீட்டை மட்டும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்தாண்டு முதல் காலாண்டில் 561 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலீடுகளை ஈர்த்த நிலையில், இந்த ஆண்டு முதல் காலாண்டில் 217 நிறுவனங்கள் மட்டும் முதலீட்டை ஈர்த்திருக்கின்றன.

    இனிவரும் நாட்களில் இது மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்டார்ட்அப்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஸ்டார்ட்அப்

    இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன? இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல்  ரிசர்வ் வங்கி
    மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:  மத்திய அமைச்சர்  விளையாட்டு வீரர்கள்
    மல்யுத்த வீரர்களின் பிரச்னையை விவாதிக்க விவசாயிகள் இன்று பெரும் கூட்டம்  டெல்லி
    வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி குறைவு மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025