NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வரலாற்று நிகழ்வு: ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான காரணம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    வரலாற்று நிகழ்வு: ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான காரணம் என்ன?
    இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    வரலாற்று நிகழ்வு: ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான காரணம் என்ன?

    எழுதியவர் Sindhuja SM
    Aug 20, 2023
    05:17 pm

    செய்தி முன்னோட்டம்

    வரலாற்று நிகழ்வு: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான இன்று(ஆகஸ்ட் 20) அவர் எப்படி, எதனால் படுகொலை செய்யப்பட்டார் என்பதை தெரிந்துகொள்வோம்.

    1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கலந்து கொண்டார்.

    அப்போது, அவரது காலில் விழுந்து வணங்குவது போல் அவர் அருகில் வந்த தனு என்ற பெண் தற்கொலை குண்டுதாரி, வெடிகுண்டை வெடிக்க செய்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தார்.

    இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    1980களின் பிற்பகுதிகளில் இலங்கையின் தமிழீழ விடுதலை புலிகள்(LTTE) மிக தீவிரமாக செயல்பட்டு வந்தது.

    பிஜிவ்யூ

     LTTEயை கலைப்பது ராஜீவ்-காந்தியின் முக்கிய குறிக்கோளாக இருந்ததது

    அப்போது, தீவிரவாத அமைப்பாக கருதப்பட்ட LTTEயை கலைப்பதுதான் ராஜீவ்-காந்தியின் முக்கிய குறிக்கோளாக இருந்ததது.

    அவர் பிரதமராக இருந்த போது, LTTEக்கு எதிராக இந்திய அமைதி காக்கும் படை(IPKF) என்பது உருவாக்கப்பட்டது.

    இலங்கை உள்நாட்டுப் போரில் அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த படை உருக்கப்பட்டது.

    1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால், இந்த ஒப்பந்தத்தில் LTTE இயக்கத்திற்கு முற்றிலுமாக உடன்பாடு இல்லை.

    இதற்கிடையில், 1991ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பொது தேர்தலில் தான் வெற்றி பெற்றால், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை கலைப்பதே தனது நோக்கம் என்று ராஜீவ்-காந்தி ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருந்தார்.

    இந்த காரணத்திற்காகவே LTTE அமைப்பு ராஜீவ்-காந்தியை படுகொலை செய்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வரலாற்று நிகழ்வு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    'மணிப்பூர் மக்களுக்கு துணையாக இந்தியா நிற்கிறது': பிரதமர் மோடி மணிப்பூர்
    தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா அமித்ஷா
    'நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் தான், ஆனால்' : சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங்
    ஒவ்வொரு இந்தியரின் குரலாக விளங்கும் பாரத மாதா; ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து ராகுல் காந்தி

    வரலாற்று நிகழ்வு

    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 2 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 2 காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025