NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தினம் கொண்டாடும் நாகாலாந்து மக்கள்; ஏன் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தினம் கொண்டாடும் நாகாலாந்து மக்கள்; ஏன் தெரியுமா?
    நாகா சுதந்திர தினம்

    ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தினம் கொண்டாடும் நாகாலாந்து மக்கள்; ஏன் தெரியுமா?

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 15, 2024
    06:52 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) புதுடெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

    ஆனால் நாகாலாந்தின் மலைப் பகுதிகளிலும், நாகா ஆதிக்கம் செலுத்தும் மணிப்பூரின் சில பகுதிகளிலும், மியான்மரின் எல்லையைத் தாண்டிய சில பகுதிகளிலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாகக் கொண்டாப்படுகிறது.

    இதற்கான பின்னணியை புரிந்துகொள்ள, சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் இந்தியா வரை நாம் பயணிக்க வேண்டும்.

    பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மர் 1935இல் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டாலும், எஞ்சிய வடகிழக்கு மாகாணங்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்தன.

    சுயாட்சி பிரகடனம்

    ஆகஸ்ட் 14ஐ சுதந்திர தினமாக அறிவித்த நாகர்கள்

    பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் இந்தியர்கள் சுதந்திரத்திற்காக போராடியபோது, நாகர்கள் பெரும்பான்மையாக வாழும் நாகாலாந்து, மணிப்பூரின் சில பகுதிகளில் உள்ள மக்கள், தங்களது பண்டைய பெருமையை பறைசாற்றும் வகையில் தனி நாகாலாந்து கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வந்தனர்.

    1929இல் இந்தியா வந்த சைமன் கமிஷனிடமும், இந்த கோரிக்கையை முன்வைத்தாலும், பிரிட்டிஷ் இந்திய அரசு, இதை கண்டுகொள்ளவில்லை.

    இந்த கோரிக்கை தொடர்ந்து வந்த நிலையில், 1947 ஆகஸ்ட் 14 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் காலனி ஆதிக்கம் இந்தியாவில் முடிவதாக அறிவித்த உடனேயே நாகர்கள் தங்களுடைய தனிநாடை அறிவித்து, நீலக்கொடியேற்றி சுதந்திரத்தை கொண்டாடினர்.

    இதை நினைவுகூரும் வகையில், நாகா சுதந்திர தினம் என்ற பெயரில் இதை தற்போதும் நாகா மக்கள் ஆகஸ்ட் 14 அன்று கொண்டாடி வருகின்றனர்.

    தனிநாடு கோரிக்கை

    நிறைவேறாமல் போன நாகாலாந்து தனிநாடு கோரிக்கை

    இந்தியாவின் ஒரு அங்கமாக இல்லாமல் தனிநாடாக செயல்பட வேண்டும் என போராடி வந்த நாகா கிளப் 1947 ஆகஸ்ட் 14 அன்று நாகாலாந்து சுதந்திர தினத்தை கொண்டாடினாலும், அவர்களின் தனிநாடு கோரிக்கை ஏற்கப்படவில்லை.

    இந்தியா தனக்கான அரசியலமைப்பை உருவாக்கி 1950இல் குடியரசாக மாறிய நிலையில், மே 16, 1951 அன்று நாகாக்கள் தனிநாடு கோரிக்கைக்காக வாக்கெடுப்பை நடத்தினர்.

    அதில் 99.9% மக்கள் நாகாலாந்து சுதந்திர அரசிற்கு ஆதரவாக வாக்களித்தாலும், அது ஏற்கப்படவில்லை.

    தெற்காசியாவின் நீண்ட நெடிய சுயாட்சி போராட்டமாக நாகலாந்து தனிநாடு போராட்டம் உள்ளது.

    இதற்கிடையே, இந்திய அரசின் தொடர் பேச்சுவார்த்தையால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாகலாந்து போராட்டக் குழுக்கள் அமைதி காத்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுதந்திர தினம்
    நாகாலாந்து
    இந்தியா

    சமீபத்திய

    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்
    'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா

    சுதந்திர தினம்

    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் சிவகங்கை
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி? சிவகங்கை

    நாகாலாந்து

    இந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை பாஜக
    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி பாஜக
    5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ இந்தியா
    மணிப்பூர் கொடூரம்: 19 வயது பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கும்பல் மணிப்பூர்

    இந்தியா

    எல்லை பாதுகாப்புப் படை தலைவரை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவு தீவிரவாதம்
    எலக்ட்ரிக் கார்கள் மூலம் மீண்டும் இந்திய சந்தையை குறிவைத்து களமிறங்கும் ஃபோர்டு ஃபோர்டு
    9 பில்லியன் டாலர்களுக்கும் மேல் அந்நிய முதலீட்டை வாரிக்குவித்த இந்திய அரசு பத்திரங்கள் முதலீடு
    இந்தியாவுக்கு அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கை அடைய 75 ஆண்டுகள் ஆகும்; உலக வங்கி அறிக்கை உலக வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025