NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது?
    எனினும் இந்த புக்-ஐ பொது மக்கள் அணுக முடியாது

    பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது?

    எழுதியவர் Venkatalakshmi V
    May 12, 2025
    02:17 pm

    செய்தி முன்னோட்டம்

    200 பக்கங்களுக்கு மேல் கொண்ட நீல நிற, limited edition அரசாங்க கையேடு தான் கடந்த வாரத்தில் நாடு முழுவதும் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு ஒரு கையேடாகப் பயன்பட்டுள்ளது.

    ஏனெனில் இது ஆயுத மோதலின் போது பல்வேறு அரசாங்கப் பிரிவுகளின் பதில் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டுகிறது.

    எனினும் இந்த புக் பொது மக்கள் அணுக முடியாது.

    The Union War Book 2010 என்பது ஒரிஜினல் லிமிடெட் பதிப்பாகும், மேலும் இது மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.

    பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் அதை ஆண்டுதோறும் புதுப்பிக்க உதவிய அமைச்சரவை செயலக அதிகாரிகள் உள்ளிட்ட, மத்திய அமைச்சகங்களைத் தவிர ஒவ்வொரு மாநில தலைமைச் செயலாளருடனும் இந்த புத்தகத்தின் ஒரு நகல் இருக்கும்.

    நெறிமுறை 

    நெறிமுறை செயல்பாடுகளை துல்லியமாக விளக்கும் guide

    "போர் ஏற்பட்டால் அவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை இது முக்கிய அதிகாரிகளுக்குச் சொல்கிறது. எனவே எந்த குழப்பமும் இல்லை, மேலும் என்ன நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அனைவருக்கும் தெளிவான யோசனை உள்ளது," என்று ஒரு அதிகாரி தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.

    தீயணைப்புப் பயிற்சிகள் முதல் வெளியேற்றங்கள் மற்றும் சைரன்கள் வரை, முழு அவசரகால பதில் பட்டியல் அவர்களின் மேசைகளில் கிடக்கும் இந்தப் புத்தகத்தால் கட்டளையிடப்படுகிறது.

    போர் புத்தகத்தின் கன்டென்ட் காலனித்துவ காலத்திற்கு முந்தையது. ஆனால் ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் ஒரு புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது.

    26/11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தகம் புது வடிவம் பெற்றது.

    ஆனால் 2010 பதிப்பு காலாவதியானதாக இருக்காதா?

    அப்டேட்

    தொழில்நுட்பங்கள் குறித்து அவ்வப்போது குறிப்புகளை சேர்க்கும் புத்தகம்

    நவீன தொழில்நுட்ப கருவிகளை பற்றி அது எப்படிப் பேசும் என்ற கேள்விக்கு,"புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் அல்லது சில நேரங்களில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் அதே வேளையில், மூன்று அமைச்சகங்களும் அவ்வப்போது குறிப்புகளை அனுப்புகின்றன. பின்னர் இவை புத்தகத்தில் சேர்க்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்ப புதுப்பிப்புகள் இப்படிதான் அந்த புத்தகத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது,'' என்று அதிகாரி கூறினார்.

    பெரிய அளவிலான அணிதிரட்டல்களைக் கையாளுதல் மற்றும் தவறான தகவல்களை நிர்வகித்தல் முதல் உணவு விநியோகத்தை பராமரித்தல், எரிபொருள் மற்றும் மருந்துகளை வழங்குதல் வரை அனைத்தும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

    இராணுவம், இரயில் பாதைகள், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சுகாதாரம் உட்பட முழு அரசு எந்திர தயாரிப்புக்கான அடித்தளமாக இந்தப் புத்தகம் செயல்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்தியா vs பாகிஸ்தான்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது? இந்தியா
    வர்த்தகப் போரில் திடீர் U-turn: அமெரிக்காவும் சீனாவும் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன அமெரிக்கா
    கத்தாரில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'பறக்கும் அரண்மனை' ஜெட் விமானத்தை வாங்கும் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்
    போர் பதற்றத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறந்தது இந்தியா விமான நிலையம்

    இந்தியா

    2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு மத்திய அரசு
    இந்திய பங்குச் சந்தைகள் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு அரண்: பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா எவ்வாறு முறியடித்தது? பாகிஸ்தான்
    நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல் இந்திய ராணுவம்

    இந்தியா vs பாகிஸ்தான்

    Ind vs Pak: 47வது ஒருநாள் சதமடித்து விராட் கோலி சாதனை விராட் கோலி
    ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி ஆசிய கோப்பை
    வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? ஷுப்மன் கில்
    Sports Round Up : சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமனம்; தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025