NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி
    மத்திய அரசின் ஹிட் அண்ட் ரன் சட்டத்தால் என்ன பாதிப்பு?

    மத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 02, 2024
    01:06 pm

    செய்தி முன்னோட்டம்

    திங்கட்கிழமை (ஜன.1) புத்தாண்டு அன்று இந்தியாவின் பல நகரங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சில நகரங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன.

    இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு காரணம் நாடு தழுவிய அளவில் கனரக வாகன ஓட்டுனர்கள் மத்திய அரசின் புதிய ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக தொடங்கியுள்ள போராட்டமாகும்.

    நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் பல முக்கிய சாலைகளை மறித்து ஓட்டுனர்கள் திங்கட்கிழமை மூன்று நாள் போராட்டத்தை தொடங்கினர்.

    இந்த சட்டத்திற்கு கனரக வாகன ஓட்டிகள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், சில இடங்களில் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் டாக்ஸி டிரைவர்கள் கூட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Union Govt new Hit and Run Act creates stir

    ஹிட் அண்ட் ரன் சட்டம் என்றால் என்ன?

    இந்திய தண்டனைச் சட்டத்தை மாற்றி மத்திய அரசு புதிய பாரதிய நியாய சன்ஹிதாவை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டம் சாலை விபத்து தொடர்பான வழக்குகளில் தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.

    புதிய சட்டத்தின்படி, சாலை விபத்தில் ஒருவரை எதிர்பாராதவிதமாகக் கொன்றால் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    கவனக்குறைவாக விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பைச் செய்தால் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

    அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்துவிட்டால் அல்லது சம்பவத்தை உடனடியாகப் காவல்துறையில் புகாரளிக்கத் தவறினால், பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹7 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    இது பெரிய வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வாகனம்
    விபத்து
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  தமிழ்நாடு
    'இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு': பிரதமர் மோடி பேச்சு  பிரதமர் மோடி
    வணிக கப்பல் தாக்குதல் விவகாரம்: 3 போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தியது இந்தியா  ஈரான்

    வாகனம்

    குறைந்த விலையில் வெளியாகும் ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் கார்! கார் உரிமையாளர்கள்
    7 வண்ணங்களில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650! ராயல் என்ஃபீல்டு
    இந்தியர்கள் கொண்டாட மறந்த சூப்பரான 5 பைக்குகள் இங்கே! பைக் நிறுவனங்கள்
    டொயோட்டாவின் Hilux Pickup SUV கார் - அதிரடியாக விலை குறைப்பு! கார் உரிமையாளர்கள்

    விபத்து

    வாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு சென்னை
    மதுரா பட்டாசு சந்தையில் பயங்கர தீவிபத்து: பலர் காயம் உத்தரப்பிரதேசம்
    ஹைதராபாத்தில் உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி ஹைதராபாத்
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிந்து விபத்து: 3வது நாளாக தொடரும் 40 தொழிலாளர்களை மீட்கும் பணி  உத்தரகாண்ட்

    மத்திய அரசு

    இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கடந்து வந்த பாதை உதயநிதி ஸ்டாலின்
    தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இந்தியாவின் பெயர் 'பாரத்' என மாற்றம் இந்தியா
    முதல் தவணை தங்கக் கடன் பத்திரங்களுக்கான மீட்பு விலையை அறிவித்த ரிசர்வ் வங்கி  முதலீடு
    உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்டதன் பின்னணி: இந்த நெருக்கடியை எப்படி தவிர்த்திருக்கலாம்? உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025