NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு, 30 பெண்கள் மயக்கம்; எப்படி ஏற்பட்டது? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு, 30 பெண்கள் மயக்கம்; எப்படி ஏற்பட்டது? 
    மாதிரி புகைப்படம்

    தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு, 30 பெண்கள் மயக்கம்; எப்படி ஏற்பட்டது? 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 20, 2024
    11:45 am

    செய்தி முன்னோட்டம்

    தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் பதபடுத்தும் ஆலையில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக, அம்மோனியா சிலிண்டர் வெடித்ததில், அமோனியா வாயு கசிய தொடங்கியது.

    நேற்று நள்ளிரவு நடைபெற்ற அந்த விபத்து காரணமாக கிட்டத்தட்ட 30 பெண் தொழிலாளர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர் எனக்கூறப்பட்டுள்ளது.

    ஏற்றுமதி 

    பதப்படுத்த பயன்படுத்தப்படும் அம்மோனியா வாயு

    தனியாருக்கு சொந்தமான இந்த ஆலையில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அதற்காக அம்மோனியா பயன்படுத்தப்படுகிறது. அந்த ஆலையில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பெண்கள் வேலை செய்வதாக கூறப்படுகிறது.

    கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் அங்கே பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று (வெள்ளி) நள்ளிரவு ஏற்பட்ட கசிவு ஆலை முழுவதும் பரவியது.

    இதில் அங்கு பணியில் இருந்த பெண்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணை

    ஏற்கனவே இதே போன்ற வாயு கசிவு ஏற்பட்டுள்ளது அம்பலம்

    சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், இதே ஆலையில், கடந்த 2014-ம் ஆண்டும் இதே போன்றதொரு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது எனவும், அதில் 54 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    விபத்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தூத்துக்குடி

    தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா தமிழ்நாடு
    தூத்துக்குடி மாவட்ட கிராம மக்களின் தண்ணீர் பஞ்சத்தினை தீர்த்தார் நடிகர் விஷால்  விஷால்
    தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் சென்னை
    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  திருமணம்

    விபத்து

    'சைத்தான்' பட நடிகை சாலைவிபத்தில் படுகாயம்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி  நடிகைகள்
    அமெரிக்கா பாலம் விபத்து: மேடே அழைப்பு விடுத்த இந்திய குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன் அமெரிக்கா
    மதுரை அவுட்டர் ரிங் ரோட்டில் கோர விபத்து; பதைபதைக்கவைக்கும் CCTV காட்சிகள் வெளியானது மதுரை
    குடிபோதையில் இருந்த டிரைவர்: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 6 குழந்தைகள் பலி ஹரியானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025