பிப்பர்ஜாய் புயல், பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக,
ஜூன் 9
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜூன்-10 முதல் ஜூன்-12 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜூன்-13
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கேரளாவில் நேற்று(ஜூன் 8) பருவமழை தொடங்கியது. இதனால் தென் தமிழக மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
details
மீனவர்கள் ஆழ்கடலில் இருந்து கரைக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48-மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.
'பிப்பர்ஜாய்' புயலுக்கான எச்சரிக்கை:
'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
இது நேற்று இரவு 11:30 மணியளவில், கிழக்கு-மத்திய அரபிக்கடலில், மும்பைக்கு மேற்கு-தென்மேற்கு திசையில் 870 கிமீ தொலைவிலும், கோவாவிற்கு மேற்கு- தென்மேற்கு திசையில் 840 கிமீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
தற்போது, இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, குஜராத்தின் போர்பந்தருக்கு தென்மேற்கே 900 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.