தமிழக வானிலை: அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், ஏப்ரல் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான/மிதமான மழை இருக்கக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸாகவும் இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரியின் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பதிவாகியுள்ளது.