தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை அறிக்கை
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவியது.