NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவில் சீரமைப்புக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய மக்கள்
    இந்தியா

    கோவில் சீரமைப்புக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய மக்கள்

    கோவில் சீரமைப்புக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய மக்கள்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 19, 2023, 06:23 pm 0 நிமிட வாசிப்பு
    கோவில் சீரமைப்புக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய மக்கள்
    இந்த வழக்கை ஜனவரி 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது

    உத்தர பிரதேசம், பிருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோவிலைச் சுற்றி நடைபாதை அமைப்பதற்கு எதிரான போராட்டங்கள் செவ்வாயன்று தீவிரமடைந்தது. இதையடுத்து, பூசாரிகள், வியாபாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து நடைபாதை வடிவமைப்புகளின் நகல்களை தீயிலிட்டு எரித்தனர். போராட்டக்காரர்கள் ரத்தத்தால் எழுதிய கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திட்டத்தை கைவிடவும், பிருந்தாவனத்தின் பாரம்பரியத்தை காப்பாற்றவும் வலியுறுத்தி இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் நடத்திய தர்ணா காரணமாக, பாங்கே பிஹாரி கோவிலுக்கு அருகிலுள்ள சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

    உச்சநீதிமன்ற வழக்கு

    இதுகுறித்து பாங்கே பிஹாரி வியாபாரி சங்கத்தின் தலைவர் அமித் கெளதம் கூறுகையில், பிருந்தாவனத்தின் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரதமர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு ரத்தத்தால் எழுதப்பட்ட 108 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. "ஒருபுறம், நாங்கள் உச்ச நீதிமன்றத்தையும் நாடுகிறோம், மறுபுறம், போராட்டமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது," என்று அமித் கவுதம் கூறியுள்ளார். 85 வயதான போராட்டக்காரர் சகுந்தலா தேவி கோஸ்வாமி, "நடைபாதை அமைப்பது பிருந்தாவனத்தின் பாரம்பரியத்தை அழிப்பதோடு மட்டுமல்லாமல் எங்களை வீடற்றவர்களாகவும் மாற்றும்." என்று கூறி இருக்கிறார். இந்த போராட்டம் ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கை ஜனவரி 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    மோடி

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    மோடி

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா
    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023