NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவில் சீரமைப்புக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய மக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவில் சீரமைப்புக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய மக்கள்
    இந்த வழக்கை ஜனவரி 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது

    கோவில் சீரமைப்புக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய மக்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 19, 2023
    06:23 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தர பிரதேசம், பிருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோவிலைச் சுற்றி நடைபாதை அமைப்பதற்கு எதிரான போராட்டங்கள் செவ்வாயன்று தீவிரமடைந்தது.

    இதையடுத்து, பூசாரிகள், வியாபாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து நடைபாதை வடிவமைப்புகளின் நகல்களை தீயிலிட்டு எரித்தனர்.

    போராட்டக்காரர்கள் ரத்தத்தால் எழுதிய கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    திட்டத்தை கைவிடவும், பிருந்தாவனத்தின் பாரம்பரியத்தை காப்பாற்றவும் வலியுறுத்தி இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

    போராட்டக்காரர்கள் நடத்திய தர்ணா காரணமாக, பாங்கே பிஹாரி கோவிலுக்கு அருகிலுள்ள சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

    பாங்கே பிஹாரி

    உச்சநீதிமன்ற வழக்கு

    இதுகுறித்து பாங்கே பிஹாரி வியாபாரி சங்கத்தின் தலைவர் அமித் கெளதம் கூறுகையில், பிருந்தாவனத்தின் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரதமர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு ரத்தத்தால் எழுதப்பட்ட 108 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    "ஒருபுறம், நாங்கள் உச்ச நீதிமன்றத்தையும் நாடுகிறோம், மறுபுறம், போராட்டமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது," என்று அமித் கவுதம் கூறியுள்ளார்.

    85 வயதான போராட்டக்காரர் சகுந்தலா தேவி கோஸ்வாமி, "நடைபாதை அமைப்பது பிருந்தாவனத்தின் பாரம்பரியத்தை அழிப்பதோடு மட்டுமல்லாமல் எங்களை வீடற்றவர்களாகவும் மாற்றும்." என்று கூறி இருக்கிறார்.

    இந்த போராட்டம் ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கியதாக கூறப்படுகிறது.

    மேலும், இந்த வழக்கை ஜனவரி 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மோடி

    சமீபத்திய

    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி

    இந்தியா

    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! தமிழ்நாடு
    புதிதாக வரும் வாட்ஸ் அப் பிளாக் ஷார்ட்கட் - எப்படி செயல்படும்? வாட்ஸ்அப்
    நேபால் விமான விபத்து: விமான பணிபெண்ணின் கடைசி நிமிட டிக்டாக் வைரல் வைரல் செய்தி
    வோடஃபோன் நிறுவனத்தில் இருந்து திடீரென 20% ஊழியர்கள் வெளியேற்றம்! தொழில்நுட்பம்

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! இந்தியா
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025