NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தனிமையில் சந்திக்க வரும்படி கடிதம் எழுதிய ஆசிரியர் - போலீசில் புகார் அளித்த மாணவியின் தந்தை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனிமையில் சந்திக்க வரும்படி கடிதம் எழுதிய ஆசிரியர் - போலீசில் புகார் அளித்த மாணவியின் தந்தை
    மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்

    தனிமையில் சந்திக்க வரும்படி கடிதம் எழுதிய ஆசிரியர் - போலீசில் புகார் அளித்த மாணவியின் தந்தை

    எழுதியவர் Nivetha P
    Jan 07, 2023
    05:55 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப்பிரேதேசத்தில் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்னும் கிராமத்தில் இயங்கி வரும் பள்ளியில் பணிபுரியும் ஹரி ஓம் சிங் என்னும் 47 வயது ஆசிரியர், அப்பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளான்.

    அந்த கடிதத்தில், "உன்னை ,மிகவும் விரும்புகிறேன், விடுமுறை தினங்களில் நீ இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கும். எப்போ முடியுமோ அப்பொழுது தொலைபேசி கிடைக்கும் பட்சத்தில் எனக்கு போன் செய்" என்று எழுதியிருந்தது.

    மேலும், தேர்வு முடிந்து விடுமுறை காலம் தொடங்கும் முன்னரே, தன்னை தனிமையில் வந்து சந்திக்கும்படியும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

    அதே போல், 'படித்ததும் கிழித்து விடவும்' என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

    போலீசில் வழக்கு பதிவு

    அதிர்ச்சியில் உறைந்த மாணவியை கண்ட மாணவியின் தந்தை - மகளை கடத்தி செல்வதாக மிரட்டிய ஆசிரியர்

    ஆனால் அந்த கடிதத்தை படித்த மாணவி அதிர்ச்சியில் நிற்பதை கண்ட அவளது தந்தை, அந்த கடிதத்தை படித்துள்ளார்.

    இதனையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில், மாணவியின் தந்தை அந்த ஆசிரியரை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்பொழுது அந்த ஆசிரியர், தன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்று கூறியதோடு, தொடர்ந்து தொல்லை செய்தால் மாணவியை கடத்தி செல்வேன் என்றும் மிரட்டியுள்ளான்.

    மாணவியின் தந்தைக்கும் அவன் கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.

    மாணவி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியரை கண்டு சண்டையிட, அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

    எனவே இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    போலீஸ் சூப்பரண்ட் குன்வர்சிங் இவ்வழக்கினை பதிவு செய்ததோடு, ஆசிரியர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    மாமல்லபுரத்திற்கு வந்து 'மாஸ்' காட்டிய மத்திய பிரதேச முதலமைச்சர்! இந்தியா
    பண மதிப்பிழப்பு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு இந்தியா
    பஞ்சாப் முதலமைச்சர் வீடு அருகே வெடிகுண்டு! இந்திய மாநிலங்கள்
    108வது இந்திய அறிவியல் மாநாடு: தெரிந்ததும் தெரியாததும்! மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025