Page Loader
மூத்த சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் காலமானார்
மூத்த சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி

மூத்த சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் காலமானார்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 12, 2024
04:18 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி இன்று காலமானார். அவருக்கு வயது 72. நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவர் செப்டம்பர் 10 ஆம் தேதி புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) அனுமதிக்கப்பட்டார் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) கடுமையான சுவாசக் குழாய் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆகஸ்ட் 12, 1952 இல் சென்னையில் பிறந்த யெச்சூரி, இந்திய அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்தார், கூட்டணி அரசியலுக்கான தனது மூலோபாய அணுகுமுறை மற்றும் மார்க்சியத்தின் கொள்கைகளில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அரசியல் பயணம்

சீதாராம் யெச்சூரியின் அரசியல் பயணம்

சீதாராம் யெச்சூரியின் அரசியல் பயணம் 1974 ஆம் ஆண்டு இந்திய மாணவர் கூட்டமைப்பில் (SFI) இணைந்ததில் இருந்து தொடங்கியது. அவர் விரைவாக SFI அமைப்பில் உயர்ந்தார், மூன்று முறை JNU மாணவர் சங்கத்தின் தலைவராகவும், பின்னர் SFI இன் அகில இந்திய தலைவராகவும் ஆனார். 1984 இல், அவர் CPI(M) இன் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் நிரந்தர அழைப்பாளராக ஆனார். 1992 வாக்கில், அவர் பொலிட்பீரோ உறுப்பினராக இருந்தார். அவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அந்த பதவியினை வகித்தார். யெச்சூரி 2005 முதல் 2017 வரை மேற்கு வங்காளத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராகப் பணியாற்றினார். பிரகாஷ் காரத்தை அடுத்து 2015 இல் CPI(M) பொதுச் செயலாளராகப் பதவியேற்றார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

இரங்கல் 

ராகுல் காந்தி இரங்கல் 

சீதாராம் யெச்சூரியின் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,"சீதாராம் யெச்சூரி ஒரு நண்பர். நமது நாட்டைப் பற்றிய ஆழமான புரிதலுடன் இந்தியாவின் ஐடியாவின் பாதுகாவலர். நாங்கள் நடத்திய நீண்ட விவாதங்களை நான் இழக்கிறேன். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்." என பதிவிட்டுள்ளார்.