NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றிய சைபர் மோசடி கும்பல்ல; ரூ.7 கோடியை இழந்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றிய சைபர் மோசடி கும்பல்ல; ரூ.7 கோடியை இழந்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்
    சைபர் மோசடி கும்பலிடம் ரூ.7 கோடியை இழந்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்

    சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றிய சைபர் மோசடி கும்பல்ல; ரூ.7 கோடியை இழந்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 30, 2024
    12:20 pm

    செய்தி முன்னோட்டம்

    1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்தமான் குழுமத்தின் தலைவர் எஸ்பி ஓஸ்வால், சைபர் மோசடி கும்பலால் ₹7 கோடி பணத்தை இழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

    மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் சிபிஐ அதிகாரிகள் போல் காட்டிக்கொண்டு எஸ்பி ஓஸ்வாலை அணுகி ஆன்லைன் வழியாக கைது செய்ய உள்ளதாக போலி கைது வாரண்ட் மூலம் அணுகி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.

    அவர்களின் மிரட்டலுக்கு பயந்து நிறுவனத்தின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ .7 கோடி தொகை மாற்றப்பட்டுள்ளது.

    இதில் தொடர்புடைய இரண்டு சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ₹5.25 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.

    போலீசார் விசாரணையை தொடங்கி, கும்பலில் பலரை அடையாளம் கண்டுள்ளனர்.

    நடவடிக்கை

    பஞ்சாப் காவல்துறை நடவடிக்கை

    இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு, இணைய மோசடி செய்பவர்களின் வலையமைப்பை பஞ்சாப் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை முறியடித்த பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதுவரை, அவர்களிடமிருந்து ₹5.25 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பஞ்சாபின் லூதியானா போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சாஹல் தெரிவித்துள்ளார்.

    இந்த மோசடி வழக்கில் அடையாளம் காணப்பட்ட ஏழு சைபர் குற்றவாளிகள் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

    தொழில் அதிபர் ஓஸ்வாலை ஏமாற்றியது போலவே இந்த மோசடி கும்பல் தொழில்துறையினர் மற்றும் பிற நபர்களை ஏமாற்றி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளனர்.

    இதேபோல் அசாமின் கவுகாத்தியிலும் கடந்த வாரம் ₹1.01 கோடியை இந்த கும்பல் ஏமாற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைபர் கிரைம்
    இந்தியா
    குற்றவியல் நிகழ்வு
    சிபிஐ

    சமீபத்திய

    ஜூன் மாதம் முதல் அமேசான் பிரைம் வீடியோவில் Ad free சினிமா கிடையாது! அமேசான் பிரைம்
    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது இந்தியா
    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்

    சைபர் கிரைம்

    AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்! ஆன்லைன் மோசடி
    வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்? வாட்ஸ்அப்
    நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை! இந்தியா
    இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்! இந்தியா

    இந்தியா

    இந்த ஆறு ரயில் பயணங்களை மிஸ் பண்ணிடாதீங்க; சுற்றுலா ஆர்வலர்களுக்கு சூப்பர் டிப்ஸ் கொடுத்த மத்திய அமைச்சர் பயணம்
    இந்தியாவின் முதல் ஆபத்தான கிளேட் 1 வகை குரங்கம்மை தொற்று கேரள நபருக்கு இருப்பது கண்டுபிடிப்பு குரங்கம்மை
    செயற்கை நுண்ணறிவை ஆசிரியர்களாக களமிறக்கும் இந்தியாவின் முதல் ஐஐஎம் என்ற சாதனை படைத்த ஐஐஎம் சம்பல்பூர் செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவுக்கு மதச்சார்பின்மை தேவையில்லை; அடுத்த புயலைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.என்.ரவி

    குற்றவியல் நிகழ்வு

    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  இந்தியா
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா

    சிபிஐ

    மெய்தெய் மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிபிஐயால் கைது  மணிப்பூர்
    சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ சிக்கிம்
    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்  தமிழ்நாடு
    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025