உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
உத்தரகாண்டில் உள்ள உத்தர்காசியில் கட்டப்பட்டு வரும் சுரங்கபாதையின் இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்களும், 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் சாலை திட்டத்தின் ஓர் பகுதியாக உத்தர்காசி-யமுனோத்ரி தாம் நகர் இடையே சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் சில்க்யாரா-தண்டல்கான் பகுதியினை இணைக்க சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணியளவில், 4.5கிமீ.,நீளம் கொண்ட சுரங்கப்பாதை பணியில், மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில், சுரங்கப்பாதையில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை வெளிக்கொண்டு வர, மாற்று பாதை அமைக்கும் முயற்சியில், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டது.
தொடர்ந்த தடங்கல்களும், சவால்களும்
இந்த மீட்பு பணியில் வெளிநாடுகளில் இருந்தும் நிபுணர்களும், இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டன. உத்தர்காசி மீட்பு பணிகள் 17வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கையால் துளையிடும் வெற்றிகரமாக முன்னேறியதால், மலையின் மேல்புறத்தில் இருந்து தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வெற்றிகரமாக துளைகள் இடப்பட்டு, அதன் வழியே, 80 சென்டிமீட்டர் விட்டம் கொண்டகுழாய் 60 மீட்டர் தூரம் வரை செலுத்தபட்டது. அதன்மூலம் ஸ்ட்ரெச்சர் வழியாக தொழிலாளர்கள் வெளியே கொண்டுவரப்பட்டனர். குழாய் வழியே மீட்கப்பட்ட தொழிலாளர்களை அழைத்து வர, சுரங்கத்திற்குள் அம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டது. மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சுரங்க வாயிலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன்பின்னர் சின்யாலிசவுர் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு வரப்படுவார்கள்.
தயார்நிலையில் உள்ள மருத்துவமனை
தொழிலாளர்களை நேரில் வரவேற்ற முதல்வர் தாமி
சுரங்கப்பாதையின் மீட்பு குழாயின் வழியாக வெளிவந்த தொழிலாளர்கள் அனைவரையும் மாலையிட்டு வரவேற்றார் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி. பின்னர் அந்த தொழிலாளர்களுக்கு அங்கே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ கூடாரத்தில், பிராணவாயு அளவு, பிப், ரத்தஓட்டம் போன்ற ஆரம்பகட்ட சோதனைகள் நிறைவு செய்யப்பட்டு, ஒவ்வொருவராக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன், தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவரும் செல்ல அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. முன்னதாக சுரங்கத்தினுள்ளும், தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர், அவர்களுக்கான மாற்று துணிமணிகளுடன், அவர்களை வரவேற்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது மருத்துவமனையில் ஆரம்பகட்ட வைத்தியங்கள் நிறைவடைந்ததும், தேவை இருப்பவர்கள் உடனடியாக ரிஷிகேஷில் உள்ள AIIMS மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு விரையும் ஆம்புலன்ஸ்
#WATCH | Uttarkashi tunnel rescue | Ambulances leave from the Silkyara tunnel site as 35 workers among the 41 workers trapped inside the Silkyara tunnel in Uttarakhand since November 12 have been successfully rescued. pic.twitter.com/K5hboVEa0I— ANI (@ANI) November 28, 2023