NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
    உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு

    உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 28, 2023
    08:37 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்டில் உள்ள உத்தர்காசியில் கட்டப்பட்டு வரும் சுரங்கபாதையின் இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்களும், 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் சாலை திட்டத்தின் ஓர் பகுதியாக உத்தர்காசி-யமுனோத்ரி தாம் நகர் இடையே சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதில் சில்க்யாரா-தண்டல்கான் பகுதியினை இணைக்க சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது.

    அதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணியளவில், 4.5கிமீ.,நீளம் கொண்ட சுரங்கப்பாதை பணியில், மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது.

    அந்த விபத்தில், சுரங்கப்பாதையில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

    அவர்களை வெளிக்கொண்டு வர, மாற்று பாதை அமைக்கும் முயற்சியில், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டது.

    card 2

    தொடர்ந்த தடங்கல்களும், சவால்களும்

    இந்த மீட்பு பணியில் வெளிநாடுகளில் இருந்தும் நிபுணர்களும், இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டன.

    உத்தர்காசி மீட்பு பணிகள் 17வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கையால் துளையிடும் வெற்றிகரமாக முன்னேறியதால், மலையின் மேல்புறத்தில் இருந்து தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து வெற்றிகரமாக துளைகள் இடப்பட்டு, அதன் வழியே, 80 சென்டிமீட்டர் விட்டம் கொண்டகுழாய் 60 மீட்டர் தூரம் வரை செலுத்தபட்டது. அதன்மூலம் ஸ்ட்ரெச்சர் வழியாக தொழிலாளர்கள் வெளியே கொண்டுவரப்பட்டனர்.

    குழாய் வழியே மீட்கப்பட்ட தொழிலாளர்களை அழைத்து வர, சுரங்கத்திற்குள் அம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டது.

    மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சுரங்க வாயிலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன்பின்னர் சின்யாலிசவுர் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு வரப்படுவார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    தயார்நிலையில் உள்ள மருத்துவமனை 

    #WATCH | Uttarkashi tunnel rescue | Preparations complete at Community Health Center Chinyalisaur for the treatment of 41 workers who will be brought here after they are rescued and brought out of Silkyara tunnel. pic.twitter.com/MZJUZ8F0x8

    — ANI (@ANI) November 28, 2023

    card 3

    தொழிலாளர்களை நேரில் வரவேற்ற முதல்வர் தாமி

    சுரங்கப்பாதையின் மீட்பு குழாயின் வழியாக வெளிவந்த தொழிலாளர்கள் அனைவரையும் மாலையிட்டு வரவேற்றார் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி.

    பின்னர் அந்த தொழிலாளர்களுக்கு அங்கே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ கூடாரத்தில், பிராணவாயு அளவு, பிப், ரத்தஓட்டம் போன்ற ஆரம்பகட்ட சோதனைகள் நிறைவு செய்யப்பட்டு, ஒவ்வொருவராக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    அவர்களுடன், தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவரும் செல்ல அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    முன்னதாக சுரங்கத்தினுள்ளும், தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர், அவர்களுக்கான மாற்று துணிமணிகளுடன், அவர்களை வரவேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது மருத்துவமனையில் ஆரம்பகட்ட வைத்தியங்கள் நிறைவடைந்ததும், தேவை இருப்பவர்கள் உடனடியாக ரிஷிகேஷில் உள்ள AIIMS மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    embed

    மருத்துவமனைக்கு விரையும் ஆம்புலன்ஸ் 

    #WATCH | Uttarkashi tunnel rescue | Ambulances leave from the Silkyara tunnel site as 35 workers among the 41 workers trapped inside the Silkyara tunnel in Uttarakhand since November 12 have been successfully rescued. pic.twitter.com/K5hboVEa0I— ANI (@ANI) November 28, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    சுரங்கபாதை
    விபத்து
    உத்தர்காசி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உத்தரகாண்ட்

    இந்தியாவின் முதல் கிராமமானது உத்தரகாண்டின் 'மனா' இந்தியா
    கேதர்நாத் யாத்திரை முன்பதிவு கடும் பனிப்பொழிவால் நிறுத்திவைப்பு  இந்தியா
    டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை துவக்கி வைத்தார் மோடி  பிரதமர் மோடி
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  இந்தியா

    சுரங்கபாதை

    உத்தர்காசி சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அர்னால்ட் டிக்ஸ்; யார் அவர்? உத்தரகாண்ட்
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி: இனி மெஷின் வேண்டாம், கைகளாலேயே துளையிட திட்டம் உத்தரகாண்ட்
    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இந்திய ராணுவம் வரவழைப்பு உத்தரகாண்ட்
    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன? உத்தரகாண்ட்

    விபத்து

    சென்னையில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப மரணம்  செங்கல்பட்டு
    கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி கார்
    கஜகஸ்தான் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 32 பேர் பலி, 18 பேர் மாயம்  உலகம்
    ஆந்திரா ரயில் விபத்து: 13 பேர் மரணம், 40க்கும் மேற்பட்டோர் காயம் எனத்தகவல் ரயில்கள்

    உத்தர்காசி

    சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம், ஏன்? இந்தியா
    இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள்  உத்தரகாண்ட்
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு தொழிலாளர் முதல்கட்டமாக மீட்பு  உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025