NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவர்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவர்?
    இந்த பணிகள் முடிய இன்னும் பல நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

    உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவர்?

    எழுதியவர் Sindhuja SM
    Nov 22, 2023
    01:06 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை கடந்த நவம்பர் 12 ஆம் தேதி இடிந்து விழுந்ததையடுத்து, 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கபாதையில் சிக்கி கொண்டனர்.

    அதனை தெடர்ந்து, 10 நாட்களுக்கும் மேலாக அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை.

    முதல் 5 நாட்கள் நடந்த துளையிடும் பணிகளின் போது, சுரங்கப்பாதை மீண்டும் மீண்டும் சரிந்து விழுந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை ட்ரில்லிங் பணிகள் மொத்தமாக நிறுத்தப்பட்ட நிலையில், அது நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது.

    தற்போது, சுரங்கபாதையின் இரண்டு நுழைவு வாயில்களில் இருந்தும், உச்சியில் இருந்தும் துளையிடும் பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த பணிகள் முடிய இன்னும் பல நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

    யூஜிசின்க்வெ

    தற்போது என்ன மீட்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது?

    அது வரை, சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தேவையான பொருட்கள் ஒரு குழாய் மூலம் அனுப்பப்படும்.

    41 தொழிலாளர்களை மீட்க 5 விருப்பங்கள் கொண்ட செயல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ONGC), சட்லுஜ் ஜல் வித்யுத் நிகம்(SJVNL), ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்(RVNL), தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு(NHIDCL) ஆகிய ஐந்து ஏஜென்சிகள் இந்த திட்டங்களை செயற்படுத்தி வருகின்றன.

    NHIDCL, 60-70 மீ நீளமும் 900 மீ அகலமும் கொண்ட முதல் வெளியேற்ற சுரங்கப்பாதையில் பணியைத் தொடங்கியுள்ளது.

    RVNL அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக மற்றொரு செங்குத்து பைப்லைனை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

    THDC, சுரங்கப்பாதையின் பார்கோட் முனையிலிருந்து மைக்ரோடன்னல் பணியைத் தொடங்கி இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    மத்திய அரசு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    மத்திய அரசு

    புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி ராஜினாமாவா? பதவி நீக்கமா? - தமிழிசை விளக்கம் தமிழிசை சௌந்தரராஜன்
    100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன? தமிழ்நாடு
    '26 வார கருவை கொல்ல முடியாது': உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து  உச்ச நீதிமன்றம்
    'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025