NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட் 

    பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2024
    06:33 pm

    செய்தி முன்னோட்டம்

    பாஜக ஆளும் உத்தரகாண்ட், பொது சிவில் சட்ட(யுசிசி) மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமாக மாறியுள்ளது.

    பாஜக ஆளும் பிற மாநிலங்களும் இந்த மசோதாவை விரைவில் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் UCC மசோதாவை அறிமுகப்படுத்த விரும்புவதாக ராஜஸ்தான் ஏற்கனவே கூறியுள்ளது.

    பொதுவான தனிப்பட்ட சட்டங்களை நிறுவும் நோக்கத்துடன் UCC மசோதாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை, முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான மாநில அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.

    மதம், இனம், பாலினம், பாலீர்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் தனிப்பட்ட சட்டங்களை பிரிக்காமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிகளை வழங்கும் சட்டம் பொது சிவில் சட்டம் என்று அழைக்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றியது உத்தரகாண்ட்

    The Uniform Civil Code Uttarakhand 2024 Bill, introduced by Chief Minister Pushkar Singh Dhami-led state government, passed in the House.

    After passing the UCC Bill in the Assembly, Uttarakhand has become the first state in the country to implement the Uniform Civil Code. pic.twitter.com/7KGYYm3XLJ

    — ANI (@ANI) February 7, 2024

    உத்தரகாண்ட்

    பெண்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட மசோதா: முதல்வர் தாமி 

    "உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று ஒரு முக்கியமான நாள். நாடு முழுவதும் உள்ள மக்கள் நீண்ட நாட்களாக கோரி வரும் மசோதாவை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம், அதை முதன்முதலில் நிறைவேற்றியது உத்தரகாண்ட் மாநிலம் தான். அனைத்து ஆட்சிக்கு வருவதற்கும், மசோதாவை நிறைவேற்றுவதற்கும் எங்களுக்கு வாய்ப்பளித்ததற்கு எம்.எல்.ஏ.க்களுக்கும், உத்தரகண்ட் மக்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்." என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் முதல்வர் தாமி நன்றி தெரிவித்தார்.

    இந்த மசோதா யாருக்கும் எதிரானது அல்ல என்றும், அனைவரின் நலனுக்காகவும், குறிப்பாக பெண்களின் நலனுக்காக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்

    சமீபத்திய

    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ

    உத்தரகாண்ட்

    உத்தரகாண்டில் கனமழை: கடும் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கல்லூரி கட்டிடம் கனமழை
    உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை சீற்றம்: 54 பேர் பலி ஹிமாச்சல பிரதேசம்
    இந்தியாவில் முதல்முறையாக பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது உத்தரகாண்ட் பாஜக
    உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025