Page Loader
பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட் 

பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட் 

எழுதியவர் Sindhuja SM
Feb 07, 2024
06:33 pm

செய்தி முன்னோட்டம்

பாஜக ஆளும் உத்தரகாண்ட், பொது சிவில் சட்ட(யுசிசி) மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமாக மாறியுள்ளது. பாஜக ஆளும் பிற மாநிலங்களும் இந்த மசோதாவை விரைவில் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் UCC மசோதாவை அறிமுகப்படுத்த விரும்புவதாக ராஜஸ்தான் ஏற்கனவே கூறியுள்ளது. பொதுவான தனிப்பட்ட சட்டங்களை நிறுவும் நோக்கத்துடன் UCC மசோதாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை, முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான மாநில அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. மதம், இனம், பாலினம், பாலீர்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் தனிப்பட்ட சட்டங்களை பிரிக்காமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிகளை வழங்கும் சட்டம் பொது சிவில் சட்டம் என்று அழைக்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றியது உத்தரகாண்ட்

உத்தரகாண்ட்

பெண்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட மசோதா: முதல்வர் தாமி 

"உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று ஒரு முக்கியமான நாள். நாடு முழுவதும் உள்ள மக்கள் நீண்ட நாட்களாக கோரி வரும் மசோதாவை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம், அதை முதன்முதலில் நிறைவேற்றியது உத்தரகாண்ட் மாநிலம் தான். அனைத்து ஆட்சிக்கு வருவதற்கும், மசோதாவை நிறைவேற்றுவதற்கும் எங்களுக்கு வாய்ப்பளித்ததற்கு எம்.எல்.ஏ.க்களுக்கும், உத்தரகண்ட் மக்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்." என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் முதல்வர் தாமி நன்றி தெரிவித்தார். இந்த மசோதா யாருக்கும் எதிரானது அல்ல என்றும், அனைவரின் நலனுக்காகவும், குறிப்பாக பெண்களின் நலனுக்காக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.