NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பதவிகாலம் முடியும் முன்னரே UPSC தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பதவிகாலம் முடியும் முன்னரே UPSC தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா 
    யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி

    பதவிகாலம் முடியும் முன்னரே UPSC தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 20, 2024
    10:18 am

    செய்தி முன்னோட்டம்

    யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.

    2029இல் தனது பதவிக்காலம் முடிவதற்கு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ராஜினாமா செய்தார்.

    மனோஜ் சோனி ஒரு மாதத்திற்கு முன்னரே தனது ராஜினாமாவை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    எனினும், அது ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    மனோஜ் சோனி 2017 இல் UPSC இல் உறுப்பினராக சேர்ந்தார்.

    அவர் மே 16, 2023 அன்று தலைவராகப் பதவியேற்றார்.

    மனோஜ் சோனி பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.

    2005ஆம் ஆண்டு, வதோதராவில் உள்ள புகழ்பெற்ற எம்எஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பிரதமர் மோடி அவரைத் தேர்ந்தெடுத்தார்.

    அந்த நிலையில், 40 வயதில், நாட்டின் இளைய துணைவேந்தர் ஆனார்.

    சர்ச்சை

    பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் காரணமாக யுபிஎஸ்சி செய்திகளில் இடம்பிடித்துள்ளது

    மனோஜ் சோனி 2015 வரை குஜராத்தின் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இரண்டு முறை பணியாற்றினார்.

    UPSC என்பது மத்திய அரசின் சார்பில் பல்வேறு தேர்வுகளை நடத்தும் ஒரு அமைப்பாகும்.

    இது ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்துகிறது- IAS, IFS, இந்திய போலீஸ் சர்வீஸ் (IPS), மத்திய சேவைகள்- குரூப் A, குரூப் B.

    பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் காரணமாக UPSC கடந்த சில நாட்களாக செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

    இந்திய நிர்வாக சேவை (IAS) 2023 பேட்ச் அதிகாரியான பூஜா கேத்கர், சமீபத்தில் புனேவில் தனது பயிற்சியின் போது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும், சிவில் சர்வீசஸ் தேர்விற்கு போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

    நடவடிக்கை

    மோசடி தொடர்பாக பூஜா கேத்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய UPSC

    தனியார் ஆடி காரில் சிவப்பு-நீல விளக்குகளை பொருத்தியதன் மூலம் கேத்கர் தனது அதிகார துஷ்ப்ரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    பூஜா கேத்கர் பயன்படுத்திய சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்று எழுதப்பட்டுள்ளது.

    போலி அடையாளத்தைப் பயன்படுத்தி சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்றதற்காக அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்வது உட்பட பல நடவடிக்கைகளை யுபிஎஸ்சி தொடங்கியது.

    சிவில் சர்வீசஸ் தேர்வு-2022க்கான அவரது வேட்புமனுவை ரத்து செய்ததற்காகவும், எதிர்காலத் தேர்வுகளில் தோன்றுவதைத் தடை செய்ததற்காகவும் கமிஷன் அவருக்கு ஒரு காரணம் நோட்டீஸ் அனுப்பியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsஎஸ்ஆர்எச்: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் வான்வெளியை மறுத்த பிறகு, இண்டிகோ விமானம் தரையிறங்கும் வரை வழிநடத்திய இந்திய விமானப்படை இண்டிகோ
    ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜூன் 1 முதல் 50% வரி விதிப்பு; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியம்
    வெளிநாட்டு மாணவர் சேர்க்கை தடுக்கப்பட்டதை அடுத்து, டிரம்ப் அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

    மத்திய அரசு

    டெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம் டெல்லி
    வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு  இறக்குமதி ஏற்றுமதி
    ஆபாசமான உள்ளடக்கத்திற்காக 18 OTT இயங்குதளங்களையும் 19 இணையதளங்களையும் முடக்கிய மத்திய அரசு  ஓடிடி
    பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு பெட்ரோல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025