NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு
    முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு
    இந்தியா

    முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    August 27, 2023 | 05:42 pm 0 நிமிட வாசிப்பு
    முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு
    இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    உத்தர பிரதேசம்: இஸ்லாமிய சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு ஆசிரியை உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்த பள்ளியை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்த விசாரணை முடியும் வரை அந்த பள்ளி மூடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, அவர்கள் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள நேஹா பப்ளிக் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு பள்ளி ஆசிரியை மாணவர்களிடம் ஒரு சிறுவனை அறையும்படி கூறியது கேமராவில் பதிவாகி இருந்தது.

    "இது ஒரு சிறிய பிரச்சினை": குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை 

    குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை டிரிப்தா தியாகி, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் ஒரு சிறுவனின் மதத்தை குறிப்பிட்டு பேசி, அவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. அதன் பிறகு, பாதிக்கப்பட்ட சிறுவனுடன் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து அந்த மாணவனின் கன்னத்தில் அடிப்பதும் அந்த வீடியோவில் காட்டப்பட்டிருந்தது. எனினும், இந்த விஷயம் குறித்து பேசிய அந்த ஆசிரியை, இது ஒரு "சிறிய பிரச்சினை" என்று தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார். "நான் ஊனமுற்றவள், அதனால் அவன் வீட்டுப்பாடம் செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக சில மாணவர்களை வைத்து அவனை அடிக்க சொன்னேன்." என்று அந்த ஆசிரியை கூறியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    உத்தரப்பிரதேசம்

    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  காவல்துறை
    அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு இந்தியா
    அயோத்தி அனுமார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் ரஜினிகாந்த்
    யோகி ஆதித்யநாத்தை அடுத்து அகிலேஷ் யாதவ்வை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்  ரஜினிகாந்த்

    இந்தியா

    புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு மத்திய அரசு
    உலக சாம்பியன்ஷிப் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி உலக சாம்பியன்ஷிப்
    இந்தியாவில் மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா
    சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா? சட்டம் பேசுவோம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023