NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு
    இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Aug 27, 2023
    05:42 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தர பிரதேசம்: இஸ்லாமிய சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு ஆசிரியை உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்த பள்ளியை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்த விசாரணை முடியும் வரை அந்த பள்ளி மூடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையில், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, அவர்கள் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள நேஹா பப்ளிக் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு பள்ளி ஆசிரியை மாணவர்களிடம் ஒரு சிறுவனை அறையும்படி கூறியது கேமராவில் பதிவாகி இருந்தது.

    டியூஹபிபு

    "இது ஒரு சிறிய பிரச்சினை": குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை 

    குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை டிரிப்தா தியாகி, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், அவர் ஒரு சிறுவனின் மதத்தை குறிப்பிட்டு பேசி, அவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

    அதன் பிறகு, பாதிக்கப்பட்ட சிறுவனுடன் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து அந்த மாணவனின் கன்னத்தில் அடிப்பதும் அந்த வீடியோவில் காட்டப்பட்டிருந்தது.

    எனினும், இந்த விஷயம் குறித்து பேசிய அந்த ஆசிரியை, இது ஒரு "சிறிய பிரச்சினை" என்று தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

    "நான் ஊனமுற்றவள், அதனால் அவன் வீட்டுப்பாடம் செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக சில மாணவர்களை வைத்து அவனை அடிக்க சொன்னேன்." என்று அந்த ஆசிரியை கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் காவல்துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் நேபாளம்
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா

    இந்தியா

    தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி நரேந்திர மோடி
    'உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்': அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  அமெரிக்கா
    இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கு ஆன செலவு எவ்வளவு? சந்திரயான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025