NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம் 
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம் 
    இந்தியா

    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம் 

    எழுதியவர் Sindhuja SM
    August 26, 2023 | 12:55 pm 1 நிமிட வாசிப்பு
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம் 
    வீடியோவில், அந்த ஆசிரியை ஒரு மதத்தை குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியை பள்ளி மாணவர்களிடம் ஒரு சிறுவனை அறையும்படி கூறியது கேமராவில் பதிவாகியுள்ளது. 8 வயதான பாதிக்கப்பட்ட சிறுவன் கணக்கு வாய்ப்பாடுகளை படிக்காததால் கோபடைந்த அந்த ஆசிரியை, அந்த சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிடுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. பாதிக்கப்பட்ட சிறுவன் அசையாமல் அவமானத்துடன் அங்கு நின்று, தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் தன்னை தாக்குவதை தாங்கி கொண்டிருப்பதும் அந்த வீடியோவில் நன்றாக தெரிந்தது. அது போக, அந்த சிறுவன் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன் என்று அந்த ஆசிரியை கூறுவதையும் நம்மால் கேட்க முடிகிறது.

    "குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்தாத முஸ்லிம் தாய்மார்களே..": ஆசிரியை 

    அந்த சிறுவனை "முஸ்லிம் சிறுவன்" என்று அழைத்த அந்த ஆசிரியை , "குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்தாத முஸ்லிம் தாய்மார்களே குழந்தைகள் கல்வியில் தோல்வியடைவதற்கு காரணம்" என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார். அந்த ஆசிரியையின் செயல் மதப் பிரச்சனையை தூண்டுவது போல் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீடியோவில், அந்த ஆசிரியை ஒரு மதத்தை குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அதை போலீசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். "இது குறித்து அடிப்படை கல்வி அலுவலரிடம் புகார் அளித்து, அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று காவல்துறை கண்காணிப்பாளர் சத்யநாராயண் பிரஜாபத் தெரிவித்துள்ளார்.

    வைரலாக பரவி வரும் ஆசிரியையின் வீடியோ 

    Teacher Encourages Students to Assault Fellow Classmate in UP’s Muzaffarpur#DisturbingIncident #Education #StudentSafety #SocialJustice #PoliceInvestigation #Newsupdate #newspaper #Dailynews #Headlines #Breaking #breakingnews #bnnbreaking pic.twitter.com/2kJdfdAqmW

    — Rafia Tasleem (@rafia_tasleem) August 26, 2023

    "பள்ளி மீது புகார் அளிக்க போவதில்லை": சிறுவனின் தந்தை 

    அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக குழந்தை உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாதிப்பட்ட சிறுவனின் தந்தை, பள்ளி நிர்வாகத்துடன் தாங்கள் சமரசத்திற்கு வந்துள்ளதால் பள்ளி மீது புகார் அளிக்க போவதில்லை என்று கூறியுள்ளார். எனினும், தன் குழந்தையை இனி அந்த பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியை திரிப்தா தியாகியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதற்கு பதிலளித்த அவர், "நான் மாற்றுத்திறனாளி என்பதால் என்னால் அந்த சிறுவனை அடிக்க முடியவில்லை. அதனால் பிற மாணவர்களை அடிக்க சொன்னேன்" என்று கூறியதாக கூறப்படுகிறது.

    "இந்தியா தீயில் எரிகிறது": ராகுல் காந்தி 

    இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனித இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுகிறார்கள். ஒரு ஆசிரியரால் இதைவிட மோசமான ஒரு விஷயத்தை இந்த நாட்டிற்கு செய்துவிட முடியாது. இந்தியா தீயில் எரிகிறது. இதே மண்ணெண்ணையைத்தான் பாஜகவினர் பரப்பி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தீக்கிரையாக்கியுள்ளனர். குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம். அவர்களை வெறுக்காதீர்கள். நாம் அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு அன்பை கற்பிக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தெலுங்கானா எம்பி ஓவைஸி, இதற்கு எதிராக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    உத்தரப்பிரதேசம்

    அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு இந்தியா
    அயோத்தி அனுமார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் ரஜினிகாந்த்
    யோகி ஆதித்யநாத்தை அடுத்து அகிலேஷ் யாதவ்வை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்  ரஜினிகாந்த்
    அயோத்தி ராமர் கோவிலுக்காக உலகின் மிகப்பெரிய 400 கிலோ பூட்டை உருவாக்கிய தம்பதி  இந்தியா

    இந்தியா

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு வீரர்களை அனுப்பும் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாடு - ரஷ்ய அதிபர் பங்கேற்கவில்லை என தகவல்  ஜி20 மாநாடு
    நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி நீரஜ் சோப்ரா
    40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி நரேந்திர மோடி

    காவல்துறை

    'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்  திரைப்படம்
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை  மணிப்பூர்

    காவல்துறை

    'மதம் மாறு அல்லது பணம் கொடு'; பெங்களூரை அதிர வைத்த பாலியல் தொழில் பெங்களூர்
    சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம்  தீவிரவாதிகள்
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது
    நாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு சிறுவன் கைது, சாதிரீதியான கயிறுகளுக்கு எதிராக நடவடிக்கை  திருநெல்வேலி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023