NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓய்வூதியம்; புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓய்வூதியம்; புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓய்வூதியம்; புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 24, 2024
    08:30 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த திட்டத்தால் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

    புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் செயல்படுத்தப்படும். மேலும் என்பிஎஸ் அல்லது யுபிஎஸ் இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட யுபிஎஸ், அரசு ஊழியர்களுக்கு உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    சிறப்பம்சங்கள்

    புதிய ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்

    மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:-

    உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம்: குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதத்தை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.

    குடும்ப ஓய்வூதியம்: மரணம் ஏற்பட்டால், ஓய்வூதியம் பெறுபவரின் குடும்பம் அவர்கள் இறக்கும் போது பெறப்பட்ட ஓய்வூதியத்தில் 60 சதவீதம் பெறும்.

    குறைந்தபட்ச ஓய்வூதியம்: குறைந்தபட்சம் 10 வருட சேவைக்குப் பிறகு அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதம் ₹ 10,000 இத்திட்டம் உறுதி செய்கிறது.

    யுபிஎஸ் திட்டத்தில் ஓய்வூதியத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பு தற்போதைய 14 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

    embed

    மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி

    VIDEO | "The Unified Pension Scheme has five pillars. The (government) employees wanted an assured amount, which was a logical requirement. Thus, 50 per cent assured pension is the first pillar of the UPS. This amount will be the average of basic pay of 12 months before... pic.twitter.com/gKTlZCBOc2— Press Trust of India (@PTI_News) August 24, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓய்வூதியம்
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    ஓய்வூதியம்

    ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள் தொழில்நுட்பம்
    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா? கடன்

    மத்திய அரசு

    14 குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  ஒப்புதல் அளித்தது மத்திய அரசு  இந்தியா
    ஹிந்தியில் தவறாக எழுதிய மத்திய அமைச்சர் சாவித்ரி தாக்கூர் அமைச்சரவை
    நீட், யுஜிசி நெட் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமலுக்கு வந்தது தேர்வு மோசடிக்கு எதிரான சட்டம்  நீட் தேர்வு
    ஜிஎஸ்டி மூலம் இந்திய அரசாங்கத்திற்கு ரூ.70,000 கோடி வசூல்  ஜிஎஸ்டி

    இந்தியா

    கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை ரூ.2,500 குறைத்தது மத்திய அரசு; டீசல், ஏடிஎஃப் மீதான வரி ரத்து மத்திய அரசு
    நிலமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி கர்நாடகா
    ஜப்பானில் உள்ள நேதாஜியின் அஸ்தி; இந்தியா கொண்டுவர பிரதமர் மோடிக்கு நேதாஜியின் பேரன் கடிதம் பிரதமர் மோடி
    ககன்யான் திட்டம்: இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தின் முதல் சோதனை டிசம்பரில் நடக்கும் என அறிவிப்பு இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025