NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை
    கல்லூரி தேர்வுகள் ரத்து றன் வெளியாகும் செய்தி உண்மையில்லை என யுஜிசி அறிக்கை

    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    May 09, 2025
    08:30 am

    செய்தி முன்னோட்டம்

    போர் சூழ்நிலை காரணமாக அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி பொது அறிவிப்பு குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முறையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அதிகாரப்பூர்வ பதிவில், இந்த அறிவிப்பு முற்றிலும் ஜோடிக்கப்பட்டதாகவும், ஆணையத்தால் வெளியிடப்படவில்லை என்றும் யுஜிசி தெளிவுபடுத்தியுள்ளது.

    பார்ப்பதற்கு சரியாக இருப்பதாக தோன்றும்படி உருவாக்கப்பட்ட இந்த அறிக்கையில், தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி மாணவர்கள் வீடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    எனினும், யுசிஜி அத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனக் கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளது மற்றும் துல்லியமான புதுப்பிப்புகளுக்கு அதன் அதிகாரப்பூர்வ தளங்களை மட்டுமே பின்பற்றுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர்

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர்

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களைத் தொடர்ந்து அதிகரித்த பதட்டங்கள் மற்றும் தவறான தகவல்கள் அதிகரித்ததை அடுத்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

    காஷ்மீர் பல்கலைக்கழகத்தால் தேர்வு ஒத்திவைப்புகள் போன்ற சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளூர் அளவில் மேற்கொள்ளப்பட்டாலும், நாடு தழுவிய ரத்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    பத்திரிகை தகவல் பணியகம் (PIB) ஆன்லைனில் பரவும் தவறான கூற்றுக்களை தீவிரமாக மறுத்து வருகிறது. இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்று யுஜிசி மீண்டும் வலியுறுத்தியது.

    மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

    மாணவர்கள் தங்கள் திட்டமிடப்பட்ட தேர்வுகளுக்குத் தொடர்ந்து தயாராகி, யுஜிசி அல்லது அந்தந்த கல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யுஜிசி
    கல்லூரி மாணவர்கள்
    தேர்வு
    ஆபரேஷன் சிந்தூர்

    சமீபத்திய

    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா
    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு பாகிஸ்தான்

    யுஜிசி

    இந்தியாவில் வளாகம் அமைக்க பல்கலைக்கழக மானியக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும்-யுஜிசி தலைவர் அறிவிப்பு இந்தியா
    கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC கல்லூரி
    இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அதிர்ச்சி தகவல் இந்தியா
    டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது  மாற்றுத்திறனாளி

    கல்லூரி மாணவர்கள்

    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு சென்னை
    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  தமிழ்நாடு
    சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ  சென்னை

    தேர்வு

    12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியாகிறது; பதிவிறக்கம் செய்வது எப்படி?  பொதுத்தேர்வு
    9 -12 வகுப்பிற்கு ஓபன் புக் எக்ஸாம்: சிபிஎஸ்இ பள்ளித்தேர்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மாற்றங்கள் சிபிஎஸ்இ
    ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை
    தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது; 97.54% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் தமிழகம்

    ஆபரேஷன் சிந்தூர்

    லெஃப்ட்-ல இண்டிகேட்டர், ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது இந்தியாவின் அதிரடி தாக்குதல் -Op Sindoor இந்திய ராணுவம்
    ஆபரேஷன் சிந்தூர்: ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் பஹல்காம்
    LoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர் துப்பாக்கி சூடு
    'மேலும் பஹல்காம் போன்ற தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கமளித்த இந்திய ராணுவம் இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025