NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விழுந்தது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விழுந்தது 
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விழுந்தது

    திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விழுந்தது 

    எழுதியவர் Nivetha P
    Aug 05, 2023
    11:27 am

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உலகளவில் பிரசித்திப்பெற்ற கோயிலாகும்.

    108 திவ்யத்தேசங்களில் ஒன்றாக திகழும் இது ஆசியாவிலேயே உயர்ந்த ராஜகோபுரம் கொண்ட கோயில் என்னும் பெருமையினையும் பெற்றுள்ளது.

    இக்கோயிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்கள், வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைத்தந்து சாமித்தரிசனம் செய்வது வழக்கம்.

    ஆண்டு முழுவதுமே விழாக்கோலம் கொண்டு விளங்கும் இக்கோயிலில் தற்போது ஆடி திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் இக்கோயிலின் கிழக்கு நுழைவுவாயில் கோபுரத்தின் முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அதனை முழுமையாக சீரமைக்காமல் மேலோட்டமாக பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில் சிமெண்ட் மேற்புற பூச்சு விழாமல் இருக்க சவுக்குக்கம்புகள் கொண்டு முட்டு கொடுக்கப்பட்டு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    சீரமைப்பு பணிகள் 

    நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல் 

    இந்நிலையில், இதனை முழுமையாக சீரமைக்க இந்து அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் இணைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இது குறித்து கோயில் நிர்வாக ஆணையர் தரப்பில், இப்பணிகளை மேற்கொள்ள ரூ.67 லட்சம் கோயில் நன்கொடையாளர்களிடம் கோரியதாகவும், ஆனால் யாரும் உதவ முன்வராத காரணத்தினால் கோயில் நிர்வாகமே இதற்கான பொறுப்பினை ஏற்று விரைவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் என்றும் கூறியிருந்தார்.

    இதனிடையே இன்று(ஆகஸ்ட்.,5) அதிகாலை 1.50க்கு கிழக்கு கோபுர முதல்நிலை சுவர் இடிந்து விழுந்துள்ளது.

    அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை.

    இதனால் இந்த விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    ஆடி
    திருவிழா
    அறநிலையத்துறை

    சமீபத்திய

    தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல் பொறியியல்
    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்
    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் கோவில்கள்

    ஆடி

    ஆடி காரில் சென்று டீ விற்கும் இளைஞர் - பின்னணி என்ன?  ட்ரெண்டிங் வீடியோ
    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு துவங்கியது  கேரளா
    ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17ஆம் தேதி விடுமுறை ராமநாதபுரம்
    கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு  தமிழ்நாடு

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு

    அறநிலையத்துறை

    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    சமயபுர மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.556.39 கோடியாக உயர்வு தமிழ்நாடு
    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு தமிழ்நாடு
    சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை  கடலூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025