
தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 17, 18ம்.,தேதிகளில் அதி கனமழை பெய்தது.
இதனால் அந்த மாவட்டங்கள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளநீர் பாதிப்பு அதிகம் என்பதால் அப்பகுதி மக்கள் இன்னமும் அதிலிருந்து முழுமையாக மீளவில்லை என்று கூறப்படுகிறது.
அப்பகுதிகளில் தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நெல்லையில் நாளை(டிச.,21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு காரணமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
விடுமுறை குறித்த தகவல்
#BREAKING | வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(டிச.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு#SchoolLeave | #ThoothukudiRains | #ThoothukudiFlood | #Thoothukudi pic.twitter.com/CGEOc5a5HA
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 20, 2023