NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையிலுள்ள கடற்கரைகளில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையிலுள்ள கடற்கரைகளில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு
    சென்னையிலுள்ள கடற்கரைகளில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு

    சென்னையிலுள்ள கடற்கரைகளில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு

    எழுதியவர் Nivetha P
    Sep 24, 2023
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியோடு பொது இடங்களில் விநாயகர் சிலையினை வைத்து வழிபட்டனர்.

    அதன்படி சென்னையில் 1,500க்கும் மேற்பட்ட சிலைகள் பொது இடங்களில் வைத்துள்ள நிலையில், தற்போது அதனை கரைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னையிலுள்ள பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 4 கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நேற்று(செப்.,23) முதலே இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கரைக்கும் பணி துவங்கிய நிலையில், இன்று 2வது நாளாக இந்த நிகழ்வு நடக்கவுள்ளது.

    சிலை 

    மொத்தம் 22,080 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

    அதன்படி, பிரம்மாண்ட சிலை கரைப்புகளுக்கு ஏதுவாக பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியில் ட்ரோலி மற்றும் கிரேன் வசதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட இந்த 4 கடற்கரைகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கரைக்கப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.

    அந்த வகையில் சென்னை மற்றும் தாம்பரம், ஆவடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 22,080 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் சிலை கரைப்பு நிகழும் பகுதிகளில் தற்காலிக கட்டுப்பாடு அறைகள், கண்காணிப்பு கேமராக்கள், ராட்சத கிரேன்கள், உதவி மையங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கடற்கரை
    விநாயகர் சதுர்த்தி
    காவல்துறை

    சமீபத்திய

    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்

    இந்தியா

    துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் துப்பாக்கிச் சுடுதல்
    மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய விதிகள்: முழு விவரம்  நாடாளுமன்றம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  கொரோனா
    2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் களம் காணும் 4 இந்திய தாய்மார்கள் ஆசிய விளையாட்டுப் போட்டி

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தி அன்று நியாயவிலை கடைகள் இயங்காது: தமிழக அரசு அறிவிப்பு  தமிழக அரசு
    பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது  சிவகங்கை
    இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர்: யானை முகத்தானை எப்படி வழிபடுவது நல்லது? இந்தியா
    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை  காவல்துறை

    காவல்துறை

    ஹரியானா வன்முறை எதிரொலி: காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் ஹரியானா
    முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீலகிரி
    ஹரியானா வன்முறைகளை அடுத்து 'முஸ்லீம்களைப் புறக்கணிக்க' 14 பஞ்சாயத்துகள் முடிவு  ஹரியானா
    நாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு சிறுவன் கைது, சாதிரீதியான கயிறுகளுக்கு எதிராக நடவடிக்கை  திருநெல்வேலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025