சந்தேஷ்காலி வழக்கில் திரிணாமுல் கட்சியின் ஷேக் ஷாஜகான் கைது
மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காலியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான், 55 நாட்களுக்கு பிறகு வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர், வடக்கு 24 பர்கானாஸில் உள்ள மினாகான் பகுதியில் இருந்து நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதனை தொடர்ந்து, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று மூத்த காவல்துறை அதிகாரி அமினுல் இஸ்லாம் கான் தெரிவித்தார். முன்னதாக ஷேக் ஷாஜகானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக கொல்கத்தா உயர் நீதிமன்றம் மாநில காவல்துறையை கண்டித்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த கைது நடந்துள்ளது.