
திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பொதுநல மனு
செய்தி முன்னோட்டம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இதனையடுத்து நாடு முழுவதும் கொந்தளிப்பு கிளம்பியது. கடந்த கால ஜெகன்மோகன் ஆட்சியின்போது திருப்பதி லட்டு தயாரிக்க தரம் தாழ்ந்த நெய் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இந்த முறைகேடு ஏற்பட்டதாகக் கூறி, லட்டுவில் கலக்கப்பட்ட மூலப்பொருட்களை உறுதி செய்த ஆய்வறிக்கையையும் அவர் வெளியிட்டார்.
அதில் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.
மனு
உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு
திருமலை திருப்பதி தேவஸ்தானம், லட்டின் புனிதத்தன்மை மீட்கப்பட்டதாக TTD விளக்கமளித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை விசாரிக்க சுா்ஜித் சிங் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், நெய்க்குப் பதிலாக விலங்கு கொழுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட லட்டையை பிரசாதமாக வழங்கியதால் பக்தர்களின் உணர்வுகள் புண்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியில் தேவஸ்தானத்திற்கு நெய் கொள்முதல் செய்யும் விதிகள் கடுமையாக இருந்தன என கூறிய முதல்வர் சந்திரபாபு, இவற்றில் மாற்றம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு மீது பொய்யான குற்றசாட்டை பரப்புவதாக 8 பக்கம் கொண்ட கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில், அரசியல் நோக்கங்களுக்காக பக்தர்களின் நம்பிக்கைகளை வைத்து விளையாடுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.