NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் 
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம்

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 02, 2023
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயில் பிரசித்திப்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் ஆனி பெருந்திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்தாண்டும் கடந்த ஜூன் 24ம்தேதி இந்த கோயிலில் திருவிழா கொடியேற்றத்தோடு துவங்கியது.

    இத்திருவிழா நாட்களில் காலையும் மாலையும் சுவாமி-அம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து எழுந்தருளினர்.

    மேலும் இத்திருவிழாவினையொட்டி நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளும், சொற் பொழிவுகளும் அரங்கேறியது.

    இதனையடுத்து 8ம் நாளான நேற்று(ஜூலை.,1) நடராஜ பெருமாள் வெள்ளை மற்றும் பச்சை ஆடை அணிந்து உள் பிரகாரத்திற்குள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து, மாலை நேரத்தில் கங்காளநாதர் தங்கச்சப்பரத்தில் வீதியுலா வந்தார்.

    தேரோட்டம் 

    திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது 

    அதனைத்தொடர்ந்து நேற்று இரவு சுவாமி தங்கக்கைலாய பர்வதவாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனையடுத்து திருவிழாவின் உச்சமான தேரோட்டம் இன்று(ஜூலை.,2) நடைப்பெற்றது.

    இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு சுவாமி-அம்பாள் பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருளினர்.

    காலை 8.15க்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட துவங்கியது.

    முதலில், விநாயகர், முருகர். அதன்பின்னர் நெல்லையப்பர் தேர், அதற்குப்பின் காந்திமதி அம்பாள்தேர் என வரிசையாக தேர்கள் இழுக்கப்பட்டது.

    திருவிழா காரணமாக திருநெல்வேலியின் 4 ரத வீதிகளும் திரளான பக்தர்கள் சூழப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

    இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் தேரினை வடம்பிடித்து இழுத்து துவக்கிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருநெல்வேலி
    திருவிழா
    சேகர் பாபு

    சமீபத்திய

    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்
    'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை காவல்துறை
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு வைரல் செய்தி
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை உள்ளூர் செய்தி

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு

    சேகர் பாபு

    சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி தமிழ்நாடு
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு  தமிழ்நாடு
    331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025