NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வரதட்சணை கொடுமையில் சிக்கிய திருநெல்வேலி இருட்டுக்கடை ஹல்வா உரிமையாளர் மகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வரதட்சணை கொடுமையில் சிக்கிய திருநெல்வேலி இருட்டுக்கடை ஹல்வா உரிமையாளர் மகள்
    திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல ஸ்வீட் கடை இருட்டுக்கடை ஹல்வா

    வரதட்சணை கொடுமையில் சிக்கிய திருநெல்வேலி இருட்டுக்கடை ஹல்வா உரிமையாளர் மகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 16, 2025
    02:01 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகளுக்கு திருமணத்துக்குப் பிறகு வரதட்சணை கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல ஸ்வீட் கடை இருட்டுக்கடை ஹல்வா.

    பல தலைமுறைகளாக இந்த வணிகத்தில் இருக்கும் இந்த குடும்பத்தின் பெண் வாரிசான கனிஷ்காவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

    ஆனால் திருமணத்துக்குப் பின் கணவரிடம் இருந்து எதிர்பாராத வகையில் மன உளைச்சல் மற்றும் வற்புறுத்தல்கள் வந்ததாக தற்போது கனிஷ்கா தெரிவித்துள்ளார்.

    புகார்

    வரதட்சணை கொடுமை மற்றும் திருமணம் தாண்டிய உறவு என புகார்

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிஷ்கா, "என் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. அந்த பெண்ணை வீட்டிற்கே அழைத்து வந்தார். இதனால் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டன. மேலும், 'திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையை எனது பேருக்கு மாற்றிக் கொடுத்தால்தான் வாழ்க்கையை தொடர முடியும்' என வற்புறுத்தினார்," என்றார்.

    வரதட்சணை சம்பந்தமான ஒடுக்குமுறையின் காரணமாக கடந்த மார்ச் 15ஆம் தேதி கோவையிலிருந்து திரும்பிய கனிஷ்காவிற்கு, தொடர்ந்து WhatsApp மற்றும் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

    இதுகுறித்து, இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மற்றும் அவரது மகள் கனிஷ்கா, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர்.

    இந்த சம்பவம், திருநெல்வேலி மற்றும் சமூக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    “வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமையை கேட்டு மிரட்டல்”#IruttukadaiHalwa | #IruttuKadaiShop | #Tirunelveli pic.twitter.com/Epawr7IEFS

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 16, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருநெல்வேலி
    திருமணம்

    சமீபத்திய

    உங்கள் ஸ்மார்ட்போனை அதிக வெப்பமடைவதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது ஸ்மார்ட்போன்
    450சிசி என்ஜினுடன் அப்பாச்சி ஆர்ஆர் 450 ஐ அறிமுகப்படுத்த டிவிஎஸ் நிறுவனம் திட்டம் என தகவல் டிவிஎஸ்
    ஸ்டார்லிங்க் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்கும் 3வது நிறுவனமாக இருக்கும்; மத்திய அமைச்சர் தகவல் இன்டர்நெட்
    கர்நாடகாவில் தடை: தக் லைஃப் பாக்ஸ்ஆபிஸில் Rs.40 கோடி இழப்பை சந்திக்ககூடும் கர்நாடகா

    திருநெல்வேலி

    திருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி வெள்ளம்
    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம்  மீட்பு பணி
    நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல் தூத்துக்குடி
    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு - தலைமை செயலாளர் பேட்டி  கனமழை

    திருமணம்

    இந்தியா-சீனா போரால் காதலியை இழந்த ரத்தன் டாடா; திருமணம் செய்யாததன் பின்னணி இதுதான் ரத்தன் டாடா
    நாக சைதன்யா-ஷோபிதா துலிபாலாவின் திருமண கொண்டாட்டங்கள் துவக்கம்; வெளியான புகைப்படங்கள் திருமணங்கள்
    'நான் அதற்கு அப்பாற்பட்டவள்': திருமண வதந்திகள், சமூக அழுத்தம் குறித்து நித்யா மேனன் நடிகைகள்
    யோகா மாஸ்டரை கரம் பிடிக்கும் நடிகை ரம்யா பாண்டியன்; வெளியான திருமண விவரங்கள் நடிகைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025