NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
    முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் இதுவரை நடந்தது

    முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 19, 2025
    05:08 pm

    செய்தி முன்னோட்டம்

    திருநெல்வேலி டவுனில் முன்னாள் எஸ்.ஐ. ஜாஹிர் உசேன் கொலைக்கான சம்பவத்தில், அவர் முன்பு புகார் அளித்திருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத திருநெல்வேலி டவுன் உதவி கமிஷனர் செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என மாநகர போலீசாரின் தகவல் தெரிவிக்கின்றது.

    திருநெல்வேலியைச் சேர்ந்த 60 வயதான ஜாஹிர் உசேன், சென்னையில் எஸ்.ஐ.யாக பணியாற்றி, 2009-ல் விருப்ப ஓய்வு பெற்றார்.

    இவர் நேற்று அதிகாலை, திருநெல்வேலி டவுன் அருகேயுள்ள மசூதியில் தொழுகை முடித்து வீடு திரும்பும் போது, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    ஜாஹிர் உசேன் சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என வீடியோ பதிவிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    அரசியல் சர்ச்சை

    இந்த வீடியோ வழக்கைச் சுற்றியுள்ள அரசியல் சர்ச்சையை தீவிரப்படுத்தியுள்ளது

    SI ஜாஹிர் ஹுசைன் கொலையும், அவரது வீடியோவும் தற்போது அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    எதிர்க்கட்சித் தலைவர்கள் தமிழக அரசை குறிவைக்கத் தூண்டியுள்ளது. கொலை குறித்து பல கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து, சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் M.K. ஸ்டாலின், "இந்த அரசாங்கம் யாரையும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க அனுமதிக்காது. நீதி நிலைநாட்டப்படும். முறையான விசாரணை நடத்தப்படும். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

    எதிர்க்கட்சிகள்

    சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்த எதிர்க்கட்சிகள்

    அதிமுக தலைவர் EPS சட்டசபையில் பேசிய போது, "ஜாஹிர் உசேன் 3 மாதங்களுக்கு முன் உயிருக்கு ஆபத்து என்று போலீசில் புகார் அளித்துள்ளார், ஆனால் முறையான விசாரணை நடப்பதில்லை" என குற்றம்சாட்டினார்.

    தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து,"தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் மிரட்டப்பட்டு கொலை செய்யப்படும் அளவுக்குச் சீரழிந்துள்ளது. காவல்துறையினர் பொதுமக்களின் புகார்களைக் கேட்பதில்லை. திராவிட முன்னேற்றக் கழக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. இந்தத் திறமையற்ற அரசாங்கத்தால் இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்கப் போகிறோம்?" என்று சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார்.

    விவகாரம்

    எதற்காக கொலை செய்யப்பட்டார் ஜாஹிர் உசேன்

    நிலத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஜாஹிர் வீடியோவில் குறிப்பிட்டது போல தௌஃபிக் மற்றும் இரண்டு கூட்டாளிகளால் ஜாகிர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இது அவர்களது குடும்பங்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு என்றும் போலீசார் விவரித்தனர்.

    தௌஃபிக்கின் மனைவிக்குச் சொந்தமான ஜாஹிரின் சொத்துக்கு அடுத்துள்ள ஒரு நிலத்திற்காக இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    அந்த நிலம் வக்ஃப் சொத்து என்று கூறி ஜாகிர் அந்த நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் தௌஃபிக்கின் குடும்பத்தினர் அது அவரது மாமியாரிடமிருந்து கிடைத்த தனிப்பட்ட பரிசு என்று வலியுறுத்தினர்.

    தகராறு அதிகரித்தது, இது ஜாஹிரின் கொலைக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருநெல்வேலி
    கொலை

    சமீபத்திய

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை

    திருநெல்வேலி

    நதிநீர் இணைப்பு குறித்து முதல்வரின் முக்கிய உத்தரவு  மு.க ஸ்டாலின்
    திருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி வெள்ளம்
    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம்  மீட்பு பணி
    நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல் தூத்துக்குடி

    கொலை

    கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரத்தில் மாநில அரசை நோக்கி கேள்விகளை எழுப்பும் பெற்றோர்  கொல்கத்தா
    ஹத்ராஸ், உன்னாவ் வழக்குகளை முடித்துவைத்த CBI குழு கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் களமிறங்குகிறது கொல்கத்தா
    கொல்கத்தா மருத்துவர் கொலை: 3 ஜூனியர் டாக்டர்களை பாலிகிராப் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடும் சிபிஐ கொல்கத்தா
    கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் லீக் ஆன ஆடியோ கிளிப்ஸ்: தங்களுக்கு தொடர்பில்லை என தந்தை மறுப்பு கொல்கத்தா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025