Page Loader
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகள் இன்றுடன்  சேவை நிறுத்தம்
53 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியூர் பேருந்துகள் இன்றுடன் சேவை நிறுத்தம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகள் இன்றுடன்  சேவை நிறுத்தம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 16, 2025
05:43 pm

செய்தி முன்னோட்டம்

திருச்சி மாநகரின் முக்கியமான வரலாற்றுச் சின்னமாக இருந்த மத்திய பேருந்து நிலையம், 53 ஆண்டுகளுக்குப் பின்னர், வெளியூர் பேருந்து சேவையை இன்றுடன் (ஜூலை 16, 2025) நிறைவு செய்கிறது. இப்போது முதல் இங்கிருந்து நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1966ல் நகர்மன்றத் தலைவர் ஏ.எஸ்.ஜி. லூர்துசாமி பிள்ளையின் முயற்சியில், 1972ல் தமிழக முதல்வர் பகவத்சலம் அதிகாரப்பூர்வமாக திறந்துவைத்தார். அவரது நினைவாக பேருந்து நிலையம் 'ஏ.எஸ்.ஜி. லூர்துசாமி பிள்ளை பேருந்து நிலையம்' எனவும் அழைக்கப்படுகிறது. சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல நகரங்களுடன் இணைப்பான மையமாக இருந்த இந்த 4.5 ஏக்கரில் அமைந்த பேருந்து நிலையம், ISO தரச்சான்று பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டங்கள்

மத்திய பேருந்து நிலையத்தில் எதிர்கால திட்டங்கள்

திருச்சி மாநகராட்சி மேயராக சாருபாலா தொண்டைமான் இருந்த காலத்தில் பேருந்து நிலையம் விரிவாக்கப்பட்டது. தற்போது மத்திய பேருந்து நிலைய பகுதியை விரிவுபடுத்தும் ரூ.100 கோடி மதிப்பிலான திட்டம் தயாரிக்கப்படுகின்றது. இதில்: வணிக வளாகங்கள் மால்கள் உள் விளையாட்டு அரங்கங்கள் பொது பூங்காக்கள் முதலானவை அடங்கும். இது, திருச்சி மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கான புதிய இடமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1960களில் சுந்தரம் டிரான்ஸ்போர்ட் போராட்டங்கள் நிகழ்ந்த இடத்தில் தோன்றிய மத்திய பேருந்து நிலையம், நகர வளர்ச்சியின் சாட்சியாக, தற்போதைய நகர பரிணாமத்தில் புதிய முகத்தை நோக்கி பயணிக்க தயாராகிறது. இந்த நிலையில் வெளியூர் பேருந்துகள் பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை தொடரும்.