NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Dec 12, 2023
    08:23 pm

    செய்தி முன்னோட்டம்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்து உத்தரவிட்டது.

    அதனை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.

    அது இன்று(டிச.,12)மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மாவட்ட ஆட்சியர்-சார்பு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்ததாக சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் மனுதாரர் ஹென்றி திபன், ஒரேயொரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக சி.பி.ஐ.தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையினை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்றும்,

    இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி.அருணா ஜெகதீசன் கொடுத்த அறிக்கையினை அரசு ஏற்றுக்கொண்டப்பட்சத்தில் அந்த அதிகாரிகள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    வழக்கு 

    வழக்கின் விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு 

    மேலும் அவர், முறையாக விசாரிக்காத சிபிஐ மீண்டும் இந்வழக்கை விசாரிக்க அனுமதிக்கக்கூடாது என்றும்,

    தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக்குழு இவ்வழக்கின் விசாரணையை நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இதனையடுத்து நீதிபதிகள், ஒரேயொரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டு மற்ற அதிகாரிகளுக்கு நற்சான்று வழங்கியது எப்படி? என்று சிபிஐ தரப்பிற்கு கேள்வியெழுப்பினர்.

    தொடர்ந்து, இதுகுறித்து மீண்டும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனில் 10 ஆண்டுகள் ஆகும் என்று கூறிய நீதிபதிகள்,

    இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா இல்லையா? என்று விளக்கமளிக்க சிபிஐ'க்கு உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    துப்பாக்கி சூடு
    சிபிஐ
    காவல்துறை

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு காவல்துறை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தமிழ்நாடு
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  உலகம்
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்

    காவல்துறை

    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  சபரிமலை
    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது சென்னை
    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு விபத்து
    விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை  விருதுநகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025