NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொல்லப்பட்டார், 12 பேர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொல்லப்பட்டார், 12 பேர் காயம்
    பயணிகள் குழு மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது pc: இந்தியா டுடே

    ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொல்லப்பட்டார், 12 பேர் காயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 22, 2025
    04:36 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

    முதற்கட்ட தகவல்களின்படி, மலையேற்றப் பயணத்திற்காகச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதல் பிற்பகல் 2:30 மணிக்கு நடந்ததாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

    பஹல்காமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அந்தப் பகுதியை சுற்றி வளைக்க படைகள் விரைந்துள்ளன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | Firing incident reported in Pahalgam, J&K; Police and Security Forces present on the spot

    Details awaited. pic.twitter.com/Ev9HXFjZZ7

    — ANI (@ANI) April 22, 2025

    விவரங்கள்

    குதிரை மூலமாகவே அணுகக்கூடிய இடத்தில் நடந்த தாக்குதல் 

    பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக போலீசார் தெரிவித்ததாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

    அதிகாரிகள் கூற்றுப்படி, இந்தப் பகுதியை கால்நடையாகவோ அல்லது குதிரைகள் மூலமாகவோ மட்டுமே அணுக முடியும் என்று செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

    பைசரன் புல்வெளிகளில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது இரண்டு அல்லது மூன்று துப்பாக்கிதாரிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    தாக்குதல் நடந்த பாதை வாகனம் ஓட்ட முடியாத சாலை என்றும், வழியில் பயங்கரவாதிகள் அமைத்திருக்கக்கூடிய சாத்தியமான பொறிகள் குறித்து படைகள் கவனமாக இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

    அந்தப் பகுதி இப்போது சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    துப்பாக்கி சூடு
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலாவாசிகள்; ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளது சுற்றுலா
    ஒரே நாளில் ₹1,000க்கும் மேல் சரிந்த தங்கம் விலை; நகை வாங்குவோர் மகிழ்ச்சி; இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை
    மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு திரௌபதி முர்மு
    ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் என்கவுண்டர்: தீவிரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடும் இந்திய ராணுவம்  ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர்

    கதுவா தாக்குதலுக்கு முன், துப்பாக்கி முனையில் உள்ளூர் மக்களை உணவு சமைக்க மிரட்டிய பயங்கரவாதிகள் இந்திய ராணுவம்
    ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க விதிகளில் திருத்தம் செய்தது மத்திய அரசு  இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் தோடாவில் என்கவுன்டர் நடவடிக்கை: 4 இராணுவ வீரர்கள் பலி  இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் தோடாவில் 5 ராணுவ வீரர்களை கொன்ற காஷ்மீர் புலிகள் அமைப்பின் பின்புலம் என்ன? பயங்கரவாதம்

    துப்பாக்கி சூடு

    லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்  அமெரிக்கா
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று! நாடாளுமன்றம்
    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுன்டரில், சிஆர்பிஎஃப் துணை ஆய்வாளர் கொல்லப்பட்டார் சத்தீஸ்கர்

    பயங்கரவாதம்

    லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி பாகிஸ்தான்
    பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை  பாகிஸ்தான்
    சிறைக்கைதிகளுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை கர்நாடகா
    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025