NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது 
    சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது

    சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது 

    எழுதியவர் Nivetha P
    Oct 05, 2023
    11:49 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, இடைநிலை ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், புதிய பணி நியமனத்திற்கான தேர்வினை நடத்தக்கூடாது என்று டெட் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் என மொத்தம் 3 வகையான ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

    இவர்களுடன் உயரதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதுவும் தோல்வியுற்றது.

    இதனைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வருடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

    அதன்பின்னர் அவர், டெட் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களின் உச்ச வயதுவரம்பு பொதுப்பிரிவினருக்கு 53ஆகவும், இதர பிரிவினருக்கு 58ஆகவும் உயர்த்தப்படும் என்று கூறினார்.

    தொடர்ந்து, பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.10,000லிருந்து ரூ.12,500ஆக உயர்த்துவதாகவும் கூறினார்.

    கைது 

    7 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்த அனுமதியில்லை - காவல்துறை 

    மேலும் அவர், இடைநிலை ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர், நிதித்துறை செயலாளர்,பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழு 3 மாதங்களில் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

    ஆனால் இந்த அறிவிப்புகள் திருப்திகரமாக இல்லை என்று ஏற்க மறுத்த ஆசிரியர்கள் சங்கங்கள், தங்கள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.

    இதனிடையே, 7 நாட்களுக்கு மட்டுமே போராட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தினை இதற்கு மேல் தொடர அனுமதிக்க முடியாது என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டது.

    அதன்படி, இன்று(அக்.,5)டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை கைது செய்த காவல்துறை, ஆயிரம்விளக்கு பகுதிகளிலுள்ள சமுதாய நலக்கூடங்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    சென்னை
    போராட்டம்
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    கைது

    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  சிபிஐ
    என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது  பாமக
    பஸ் கண்ணாடி உடைப்பு, 400 பேர் கைது, போக்குவரத்து நிறுத்தம்: கலவரபூமியாக மாறிய நெய்வேலி கலவரம்
    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு  திருவண்ணாமலை

    சென்னை

    சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல்
    ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் - மா.சுப்பிரமணியம் மருத்துவ ஆராய்ச்சி
    ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் குமுறல்; நடந்தது என்ன? இசையமைப்பாளர்
    'மறக்குமா நெஞ்சம்': ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு; ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரும் பணி துவக்கம் ஏஆர் ரஹ்மான்

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு விமான சேவைகள்
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு சென்னை
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை

    காவல்துறை

    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான்
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025