NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ?
    ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ?

    ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ?

    எழுதியவர் Nivetha P
    Nov 28, 2023
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    குன்னூர் அருகே கடந்த 2021ம்.,ஆண்டு டிச.8ம்.,தேதியன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான M1-17V5 என்னும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

    இதில் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் மரணமடைந்தனர்.

    இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த மரணத்தினை சந்தேக மரணம் என்னும் பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை தங்கள் விசாரணையினை மேற்கொண்டனர்.

    காவல்துறை 

    2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணை 

    கடந்த 2 ஆன்டுகளாக நடத்தப்பட்டு வந்த விசாரணையினை தற்போது கைவிடுவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

    174வது பிரிவின் கீழ் இவ்வழக்கினை பதிவுசெய்த குன்னூர் காவல்துறை, குறிப்பிட்ட அந்த நாளில் ஹெலிகாப்டர் இயக்க வானிலை அனுமதி கொடுக்கப்பட்டதா?என்ற கோணத்தில் விசாரணை செய்தனர்.

    இதனிடையே ஹெலிகாப்டரின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர், ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் உள்ளிட்டவை கிடைக்காத காரணத்தினால் இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.

    நிலுவை 

    வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றமே காரணம் என அறிக்கை 

    இதற்கிடையே, பிபின் ராவத் மரணம் குறித்து விசாரிக்க முப்படை விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த குழு தனது விசாரணை அறிக்கையினை 2022ம் ஆண்டு ஜனவரியில் சமர்ப்பித்துள்ளது.

    அதில், வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் என்றும், இதுதவிர நாசவேலையோ, இன்ஜின் கோளாறோ காரணமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    விளக்கம 

    அறிக்கையினை ஆமோதித்த தமிழ்நாடு காவல்துறை

    இந்நிலையில் இந்த அறிக்கையினை ஆமோதித்துள்ள தமிழக காவல்துறை, குறைந்த உயரத்தில் அடர்ந்த மேகங்கள் இருந்த பகுதியில் ஹெலிகாப்டர் சென்ற காரணத்தினால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறியுள்ளது.

    எனினும், இதனை உறுதி செய்யவே ஹெலிகாப்டரின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர், ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் உள்ளிட்டவைகளை கேட்டிருந்ததாக காவல்துறை கூறியுள்ளது.

    கைவிட்டது 

    தகவல்களை பகிர மறுத்த சூலூர் ராணுவ விமானத்தள அதிகாரிகள்

    தொடர்ந்து, இதன் காரணமாகவே வெகு நாட்களாக இந்த வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது என்றும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து காவல்துறை இவ்வழக்கின் விசாரணையினை கைவிடுவதாக தெரிவித்துள்ளது.

    முன்னதாக இதுகுறித்த தகவல்களை பகிர மறுத்த சூலூர் ராணுவ விமானத்தள அதிகாரிகள், இவை அனைத்தும் பாதுகாப்பு ரகசியங்கள் கீழ் வரும் கூறியது என குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக காவல்துறை
    குன்னூர்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தமிழக காவல்துறை

    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு சென்னை

    குன்னூர்

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜா  தமிழ்நாடு
    குடும்பத்தினருடன் ஊட்டி ரயிலில் பயணம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி
    ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து - ரயில் சேவை பாதிப்பு  ஊட்டி
    குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம் மத்திய அரசு

    காவல்துறை

    உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்  உத்தரகாண்ட்
    கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னையில் அதிகரித்த காற்று மாசு- தரக்குறியீடு 200-ஐ கடந்தது சென்னை
    தொடரும் மீட்பு பணிகள்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 பேரை தொடர்பு கொண்டது மீட்புக் குழு  உத்தரகாண்ட்

    காவல்துறை

    உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு  ராஜஸ்தான்
    ஆக்ரா ஹோட்டலில் பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது: வைரலாகும் வீடியோ  உத்தரப்பிரதேசம்
    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை நாடாளுமன்றம்
    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை தீவிரவாதிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025