NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மருத்துவர்களின் பாதுகாப்பு முக்கியம்; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மருத்துவர்களின் பாதுகாப்பு முக்கியம்; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
    மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு அதிரடி முடிவு

    மருத்துவர்களின் பாதுகாப்பு முக்கியம்; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 02, 2024
    04:49 pm

    செய்தி முன்னோட்டம்

    கொல்கத்தா சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு மருத்துவத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்த மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், இந்த வழக்கு மாநில காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டு தற்போது வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

    இதைத் தொடர்ந்து மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்புக்கு சிறப்பு சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என மருத்துவ சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    தமிழகம்

    தமிழ்நாடு மருத்துவத்துறை அறிக்கை

    கொல்கத்தா சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, தமிழக அரசின் மருத்துவத்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, மருத்துவமனைகளில் கட்டாயம் காவல்துறை மையம் அமைக்க வேண்டும். மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பிற்கு ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் இரண்டு குழுக்களை உருவாக்க வேண்டும்.

    பார்வையாளர்கள் நோயாளிகளை பார்க்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் மற்றும் பார்வையாளர்களுக்கு கட்டாயம் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

    மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி பொருத்துவதோடு, இரவுநேர பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.

    கூடுதலாக, மருத்துவ பணியாளர்களை தாக்கினால், மருத்துவ பணியாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான பதாதைகளை வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    embed

    தமிழக அரசு நடவடிக்கை

    #BREAKING | மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு!#SunNews | #TNHospitals | #GovtHospitals | #TNDoctors pic.twitter.com/KDUaGwEzDv— Sun News (@sunnewstamil) September 2, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மருத்துவத்துறை
    தமிழக அரசு
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மருத்துவத்துறை

    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு  மத்திய அரசு
    தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    நெக்ஸ்ட் தேர்வு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்  மு.க ஸ்டாலின்
    MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு  பள்ளிக்கல்வித்துறை

    தமிழக அரசு

    ஜூலை 1ஆம் தேதி தமிழகத்தில் மின் கட்டணம் 4.83% அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு தமிழகம்
    தமிழகத்தில் மின்கட்டணம் எதற்காக உயர்த்தப்பட்டது? அதன் பின்னணி என்ன? மின்சார வாரியம்
    மின்கட்டண உயர்வு உங்களை பாதிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள் மின்சார வாரியம்
    மீண்டும் தமிழகத்தில் அரசியல் கொலை; மதுரையில் நாதக கட்சி துணைச் செயலாளர் வெட்டிக்கொலை மதுரை

    தமிழகம்

    இறப்பதற்கு முன் 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய வேன் டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு திருப்பூர்
    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    அடுத்த 2 நாட்களுக்கு 2 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    தருமபுரி: காதலனை கத்தியால் குத்தி கொன்ற காதலியின் சகோதரர்கள் இந்தியா

    தமிழ்நாடு

    மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 720க்கு 720 பெற்று நாமக்கல் மாணவர் சாதனை மருத்துவக் கல்லூரி
    தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல் தமிழ்நாடு செய்தி
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    வேளாங்கண்ணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் பேருந்துகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025