NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எல்லை நிர்ணயத்தில் தமிழ்நாடு ஒரு இடத்தைக் கூட இழக்காது: உள்துறை அமைச்சர் அமித் ஷா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    எல்லை நிர்ணயத்தில் தமிழ்நாடு ஒரு இடத்தைக் கூட இழக்காது: உள்துறை அமைச்சர் அமித் ஷா 
    எல்லை நிர்ணயத்தில் தமிழ்நாடு ஒரு இடத்தைக் கூட இழக்காது

    எல்லை நிர்ணயத்தில் தமிழ்நாடு ஒரு இடத்தைக் கூட இழக்காது: உள்துறை அமைச்சர் அமித் ஷா 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 26, 2025
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால், தமிழ்நாடு எட்டு மக்களவைத் தொகுதிகளை இழக்கும் என்ற நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிராகரித்துள்ளார்.

    இந்த செயல்முறையின் சாத்தியமான தாக்கம் குறித்த கவலைகளை நிராகரித்து, தமிழ்நாடு ஒரு நாடாளுமன்ற இடத்தைக் கூட இழக்காது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    "எல்லை மறுவரையறைக்குப் பிறகும், தெற்கின் எந்த மாநிலத்தின் இடங்களும் குறைக்கப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தெளிவுபடுத்தினார்," என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் எல்லை நிர்ணயப் பணியில், மக்கள்தொகை அளவை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வது அடங்கும். இதில், தென் மாநிலங்களின் மக்களவை எம்.பி.க்களின் விகிதாச்சாரத்தில் மாற்றம் ஏற்படலாம் எனக்கூறப்படுகிறது.

    முதல்வர் கருத்து 

    எல்லை நிர்ணயம், மக்களவையில் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் என முதல்வர் கருத்து

    எல்லை நிர்ணயத்தின் தாக்கங்கள் குறித்து விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    தமிழ்நாடு தனது உரிமைகளைப் பாதுகாக்க போராட வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.

    இந்த செயல்முறையை "தென் மாநிலங்கள் மீது தொங்கும் வாள்" என்று அவர் விவரித்தார்.

    மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மாநிலம் வெற்றி பெற்றிருந்தாலும், இது நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    "நாடாளுமன்றத்தில் எங்கள் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும்... தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான விஷயம். அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி எல்லைகளைக் கடந்து பேச வேண்டும்" என்று ஸ்டாலின் கூறினார்.

    பதில்

    மத்திய அரசின் பதில்

    முன்னதாக, எல்லை நிர்ணயம் குறித்த கருத்துக்களுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாஜக தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்தார்.

    அவர் "பயத்தை பரப்புபவர்" என்றும் "கற்பனை பயங்கள் மற்றும் முட்டாள்தனமான வாதங்களை" பரப்புபவர் என்றும் குற்றம் சாட்டினார்.

    எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு எல்லை நிர்ணய நடவடிக்கையும் தெற்கில் உள்ளவை உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாகவும் அண்ணாமலை மீண்டும் வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமித்ஷா
    உள்துறை
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமித்ஷா

    புதிய குற்றவியல் சட்டங்கள் மூலமாக மருத்துவர்களுக்கு கிடைக்கப்போகும் பாதுகாப்பு சட்டம்
    நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு நாடாளுமன்றம்
    எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார் ராகுல் காந்தி
    குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு மத்திய அரசு

    உள்துறை

    மணிப்பூர் வன்முறை: கூடுதலாக 1,400 பாதுகாப்புப்படை வீரர்களை அனுப்பிய மத்திய அரசு  மணிப்பூர்
    மத்திய உள்துறை அமைச்சக ஊழியா்கள் மீது அதிக ஊழல் புகாா்: சிவிசி தகவல் இந்தியா
    இன்று முதல் உயர்கிறது இங்கிலாந்துக்கான விசா கட்டணம்; மாணவர்களின் கல்வி கட்டணம் பாதிக்குமா? இந்தியா
    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மறுப்பு  புதுச்சேரி

    தமிழ்நாடு

    தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாட்டில் இரண்டு புதிய ராம்சார் தளங்கள்; உலக சதுப்பு நில தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தமிழ்நாடு செய்தி
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    நான்கு தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025