NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்ப்பிணி பெண்கள் முகக்கவசம் அணிய வேண்டும்; தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்ப்பிணி பெண்கள் முகக்கவசம் அணிய வேண்டும்; தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
    கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

    கர்ப்பிணி பெண்கள் முகக்கவசம் அணிய வேண்டும்; தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 06, 2025
    04:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

    குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களை மையமாகக் கொண்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நிலவரப்படி, இந்தியாவில் 5,364 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரம் 4,724 பேர் குணமடைந்துள்ளனர்.

    கேரளா 1,679 பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத் (615), மேற்கு வங்கம் (596), டெல்லி (562), மற்றும் மகாராஷ்டிரா (548) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

    தமிழ்நாட்டில் 221 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

    தீவிரத்தன்மை

    வைரஸ் தீவிரத்தன்மை கொண்டதல்ல

    தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் மாறுபாடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தீவிரத்தன்மை கொண்டதல்ல என்பதை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து மாதிரிகள் புனேவின் வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.

    அங்கு சிலரு ஓமிக்ரான் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், சுகாதாரத் துறை பாதுகாப்பு நெறிமுறைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

    முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களில் முககவசங்களை அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள புதிய ஆலோசனையில், கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவமனை

    முன்கூட்டியே மருத்துவ உதவி 

    கர்ப்பிணி பெண்கள் காய்ச்சல், இருமல் அல்லது உடல் வலி இருந்தால் முன்கூட்டியே மருத்துவ உதவியை நாட வேண்டும் மற்றும் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே மருத்துவமனைகளுக்குச் செல்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    நெரிசல் மற்றும் அதிக கூட்டம் உள்ள பகுதிகளை தற்போதைக்கு கர்ப்பிணிகள் தவிர்க்கவும் இந்த ஆலோசனை பரிந்துரைக்கிறது. முககவசங்கள் தற்போது கட்டாயமில்லை என்றாலும், தடுப்பு நடவடிக்கையாக அதை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.

    வளர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் அதிக ஆபத்துள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்ப்பிணி பெண்கள்
    கொரோனா
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    கர்ப்பிணி பெண்கள் முகக்கவசம் அணிய வேண்டும்; தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் கர்ப்பிணி பெண்கள்
    சவுக்கு சங்கருக்கு ஆதரவாக பெங்களூரு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் சவுக்கு சங்கர்
    தமிழகத்தில் ஜூன் 10 முதல் 12 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! கனமழை
    'மிஷன்: இம்பாசிபிள்' படத்தின் ஸ்டண்ட் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்தார் டாம் குரூஸ் கின்னஸ் சாதனை

    கர்ப்பிணி பெண்கள்

    கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி!  பயணம்
    பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை  தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல் சுகாதாரத் துறை
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்  அரசு மருத்துவமனை

    கொரோனா

    இந்தியாவில் மேலும் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில்  2,083 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் 2,100 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு இந்தியா

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு செய்தி
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்

    தமிழ்நாடு செய்தி

    மே 12 மூலம் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பெறலாம்; டிஜிலாக்கரில் பதிவிறக்குவது எப்படி? பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்குவதற்கான அனுமதி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு தமிழகம்
    தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு தமிழக அரசு
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025