NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை மதுக்கரையில் ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை மதுக்கரையில் ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்
    கோவை மதுக்கரையில் ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்

    கோவை மதுக்கரையில் ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்

    எழுதியவர் Nivetha P
    Nov 02, 2023
    01:35 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு-கேரளா வழியே ரயில்கள் தினந்தோறும் இயங்கி வரும் நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து வாளையார் வரை, வனப்பகுதி வழியே 2 வழி ரயில் பாதை செல்கிறது.

    இப்பகுதி ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் காட்டு யானைகள், ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதுவரை 6 முறை இதுபோன்று விபத்துகள் ஏற்பட்ட நிலையில், கடந்த 15 ஆண்டுகளில், மொத்தம் 11 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    யானைகள் உயிரிழப்பதை தவிர்க்க, பல நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மற்றும் வனத்துறை தொடர்ந்து எடுத்து வருகிறது.

    இப்பகுதிகளில் அதிவேகமாக ரயில்களை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

    இருந்தாலும் இரவு நேரங்களில் வேகமாக ரயில்கள் இயக்கப்படுவதால் விபத்துகளும் தொடர்ந்து ஏற்படுகிறது.

    கேமரா 

    ரயில்களை இயக்கும் லோக்கோ பைலட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என தகவல் 

    இந்நிலையில் இரவுநேரத்தில் யானைகளின் நடமாட்டத்தை ரயில் பாதைகளில் கண்காணிக்க 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சர்வைலன்ஸ்' என்னும் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள வழித்தடங்களில் சோதனை முயற்சியாக 12 இ-சர்வைலென்ஸ் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் 24 தெர்மல் இமேஜிங் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    இதற்கான கட்டுப்பாடு அறைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கேமராக்கள் யானை நடமாட்டம் இருந்தால் அதனை புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புமாம்.

    அதன்படி அத்தகவலை வனத்துறையினர் ரயில்வேத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் பட்சத்தில்,

    ரயில்களை இயக்கும் லோக்கோ பைலட்களின் போன்களுக்கு இதுகுறித்த தகவலும் எச்சரிக்கையும் பகிரப்படும்.

    அவர்கள் ரயில்களின் வேகத்தினை குறைக்கப்படுவதன் மூலம் யானைகளின் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    சோதனை முயற்சி துவக்கம் - வீடியோ பதிவு 

    The AI based surveillance mechanism set up by TN Forest Dept has started recording elephant movements on Railway tracks in pilot project mode in Madhukkarai at Coimbatore. The surveillance system has 12 towers fitted with both thermal and normal cameras, installed at strategic… pic.twitter.com/kfimcFZ2N3

    — Supriya Sahu IAS (@supriyasahuias) November 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    கோவை
    எச்சரிக்கை
    வனத்துறை

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    கேரளா

    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை  ஒடிசா
    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி விபத்து
    சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஓணம்

    கோவை

    கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம்  அரசு மருத்துவமனை
    தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு  உலகம்
    ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை  ஊட்டி
    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை  கேரளா

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  தமிழ்நாடு
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் தமிழ்நாடு

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025