NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாக்குப்பதிவுக்கு முன் பாஜகவில் இணைந்த இந்தூர் வேட்பாளர்: காங்கிரஸுக்கு அடிக்கு மேல் அடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாக்குப்பதிவுக்கு முன் பாஜகவில் இணைந்த இந்தூர் வேட்பாளர்: காங்கிரஸுக்கு அடிக்கு மேல் அடி

    வாக்குப்பதிவுக்கு முன் பாஜகவில் இணைந்த இந்தூர் வேட்பாளர்: காங்கிரஸுக்கு அடிக்கு மேல் அடி

    எழுதியவர் Sindhuja SM
    Apr 29, 2024
    03:06 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று தனது இரண்டாவது மக்களவை வேட்பாளரை இழந்தது.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளராக இருந்த அக்ஷய் பாம் போட்டியிலிருந்து விலகி பாஜகவில் இன்று இணைந்தார்.

    மத்தியப் பிரதேச பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் இது குறித்து பதிவிட்டிருக்கிறார்.

    அக்ஷய் பாம் காரில் தன்னுடன் இருப்பது போல் அவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்ததை அடுத்து, இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    "இந்தூர் மக்களவையின் காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்தி பாம் பாஜகவுக்கு வரவேற்கப்படுகிறார்" என்று விஜயவர்கியா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    இந்தியா 

    மே 13 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தூர் தேர்தல் 

    "பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, முதல்வர் மோகன் யாதவ் மற்றும் மாநிலத் தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் தலைமையில்" இது நடைபெறுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மே 13 ஆம் தேதி நடைபெற உள்ள நான்காம் கட்டத் தேர்தலில் இந்தூர் மக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், இன்று தான் இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    "காங்கிரஸின் அக்ஷய் பாம் உட்பட 3 வேட்பாளர்கள் உரிய நடைமுறைப்படி இன்று வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இந்த செயல்முறை வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது" என்று மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்காக அக்ஷய் பாம், பாஜக எம்எல்ஏ ரமேஷ் மெண்டோலாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய பிரதேசம்
    காங்கிரஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசம்: குனோ தேசிய பூங்காவில் மீண்டும் ஒரு பெண் சிறுத்தை பலி  இந்தியா
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக
    மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயில் என்ஜினில் தீ விபத்து ரயில்கள்
    உஜ்ஜைன் பாலியல் பலாத்காரம்- ஆட்டோ டிரைவர் கைது, மூவரிடம் போலீசார் விசாரணை பாலியல் வன்கொடுமை

    காங்கிரஸ்

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்  தமிழகம்
    அவதூறு வழக்கு: சிறிது நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்த பின் ஜாமீனில் வெளிவந்தார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    கர்நாடகாவில் கோயில்கள் மீது 10% வரி விதிப்பு: மாநில அரசின் இந்து விரோதக் கொள்கை என பாஜக கண்டனம் கர்நாடகா
    5 மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025