NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்
    ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு

    ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 23, 2025
    02:29 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோத பந்தய செயலிகளை முழுமையாகத் தடை செய்யவும், ஆன்லைன் கேமிங் மற்றும் ஃபேன்டஸி விளையாட்டு தளங்களை வலுவாக ஒழுங்குபடுத்தவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை (பிஐஎல்) விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 23) ஒப்புக்கொண்டது.

    நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதை தற்காலிகமாக ஒத்திவைத்தது.

    சமூக ஆர்வலர் மற்றும் குளோபல் பீஸ் முன்முயற்சியின் தலைவர் என்று வர்ணிக்கப்படும் மனுதாரர், கட்டுப்பாடற்ற ஆன்லைன் பந்தயத்தால் சமூக மற்றும் நிதி பாதிப்பு அதிகரித்து வருவதை மேற்கோள் காட்டி இந்த மனுவை தாக்கல் செய்தார்.

    திறன் சார்ந்த விளையாட்டுகள்

    திறன் சார்ந்த விளையாட்டுகள் என்ற போர்வையில் மோசடி

    இது பெரும்பாலும் ஃபேன்டஸி விளையாட்டுகள் அல்லது திறன் சார்ந்த விளையாட்டுகளாக காட்டிக் கொண்டு, மக்களுக்கு நிதி சார் இழப்பை ஏற்படுத்துவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய ஒரு விரிவான மத்திய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    முந்தைய பொது சூதாட்டச் சட்டம், 1867 இன் கீழ் சீரான கட்டுப்பாடு இல்லாததூவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    பந்தய செயலிகளை ஊக்குவித்ததாகக் கூறப்படும் 25 பாலிவுட் பிரபலங்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் மீது இந்த ஆண்டு தொடக்கத்தில் தெலுங்கானாவில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை மனு எடுத்துக்காட்டுகிறது.

    தற்கொலை

    கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை

    தெலுங்கானாவில் ஆன்லைன் பந்தய தளங்களில் முதலீடு செய்து இழந்ததால், பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் 24 நபர்கள் தற்கொலை செய்து கொண்ட பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளது.

    பொது நலன் சார்ந்த பிரச்சினையாக கருதி, இந்த பந்தய தளங்களால் இந்திய இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஏற்படும் அபாயங்களை மனுதாரர் வலியுறுத்தினார்.

    பந்தயம் என்பது திறமைக்கான விளையாட்டு அல்ல, வாய்ப்புக்கான விளையாட்டு என்றும், எனவே இது சூதாட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இது சில இந்திய மாநிலங்களில் தடைசெய்யப்பட்ட ஒரு செயலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளதன் மூலம், ஆன்லைன் கேமிங் மற்றும் பந்தய தளங்களை தேசிய அளவில் ஒழுங்குபடுத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் கேமிங்
    உச்ச நீதிமன்றம்
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு; மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஆன்லைன் கேமிங்
    தாமதமாகிறது 'Avengers: Doomsday' வெளியீடு; எப்போது தெரியுமா? ஹாலிவுட்
    டர்புலன்ஸின் போது வான்வெளியைப் பயன்படுத்த இண்டிகோ விமானியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது இண்டிகோ
    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

    ஆன்லைன் கேமிங்

    ஆன்லைன் கேமிங் துறையை 28% GST எப்படி பாதிக்கும்? ஜிஎஸ்டி
    ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அமைச்சரவை ஜிஎஸ்டி
    பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை பிராண்டு தூதுவராக அறிவித்திருக்கும் BGMI ஆன்லைன் விளையாட்டு
    ரூ.1 லட்சம் கோடி வரையிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தக் கோரி ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் ஜிஎஸ்டி

    உச்ச நீதிமன்றம்

    வாட்ஸ்அப் மூலம் நோட்டீஸ் அனுப்பக் கூடாது; காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் தடை வாட்ஸ்அப்
    கொல்கத்தா மாணவி வழக்கில் போராட்டங்களின் போது மருத்துவர்கள் இல்லாததை முறைப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு கொல்கத்தா
    மணிப்பூர் கலவரத்தில் முதல்வர் பைரேன் சிங்கிற்குத் தொடர்பா? ஆடியோ கிளிப்பை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு மணிப்பூர்
    தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து தமிழக அரசு

    இந்தியா

    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு சீனா
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்திய ராணுவம்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்திய ராணுவம்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்திய ராணுவம்

    மத்திய அரசு

    UPSC தேர்வில் தேசிய அளவில் 23வது இடம், மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக மாணவர் சிவச்சந்திரன் சாதனை யுபிஎஸ்சி
    10 ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டிகளுக்காக ₹1.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளதாம் இந்தியா! இந்தியா
    பாகிஸ்தான் அரசின் சமூக ஊடக கணக்கை முடக்கியது மத்திய அரசு பயங்கரவாதம்
    ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025