Page Loader
'தவறான விளம்பரங்களை வெளியிட்டால் 1 கோடி ரூபாய் அபராதம்': பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 
பதஞ்சலி ஆயுர்வேத் என்பது யோகா குரு ராம்தேவால் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனமாகும்.

'தவறான விளம்பரங்களை வெளியிட்டால் 1 கோடி ரூபாய் அபராதம்': பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 

எழுதியவர் Sindhuja SM
Nov 22, 2023
10:25 am

செய்தி முன்னோட்டம்

நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் என்று கூறி "தவறான" விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத் என்பது யோகா குரு ராம்தேவால் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனமாகும். தடுப்பூசி மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக கடந்த வருடம் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து, ஆகஸ்ட் 23, 2022 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் ஆகியவற்றிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் மனுவை நேற்று நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் விசாரித்தது.

பைஜ்க்வெல்

ஒவ்வொரு விளம்பரத்திற்கும் ரூ. 1 கோடி அபராதம்

அந்த சுருக்கமான விசாரணையின் போது, ​​நவீன மருத்துவ முறைகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை பரப்ப வேண்டாம் என்று பதஞ்சலியிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. "பதஞ்சலி ஆயுர்வேத் தவறான விளம்பரங்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற மீறல்களை நீதிமன்றம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும்...'' என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஒரு குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்த முடியும் என்று தவறான கூற்றை விளம்பரம் செய்தால், அப்படிப்பட்ட ஒவ்வொரு விளம்பரத்திற்கும் ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இது போன்ற தவறான மருத்துவ விளம்பரங்களுக்கு தீர்வு காணுமாறு மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.