NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு 
    இந்த வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 21, 2023
    12:50 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 21) ஒத்திவைத்தது.

    தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி எஸ்.மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜியை மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்க இயக்குனரகம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்த மேல்முறையீட்டை இன்று விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச், அமலாக்க இயக்குனரகத்தின் மனுவை ஒத்திவைத்தது.

    ஞ்ட்ஸ்

    சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகே உச்ச நீதிமன்றம்இந்த  விசாரிக்கும் 

    அமலாக்க இயக்குனரகத்திற்கு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அமலாக்க இயக்குநரகத்தின் காவலை பொருட்படுத்தாமல் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதித்தது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். மேலும், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட சிகிச்சையே கேள்வியாக உள்ளது. விசாரணையை தாமதப்படுத்தவே இப்படி செய்கின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.

    இதற்கு, "மருத்துவ வாரியம் ஒரு நபரை ஆரோக்கியமானவர் என்று அறிவித்த பிறகே நீங்கள் அவரை காவலில் எடுத்திருக்க வேண்டும்" என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

    இந்த மனுவை நாளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க இருப்பதால், அதற்கு முன் இதை விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    தமிழ்நாடு
    உச்ச நீதிமன்றம்
    தமிழகம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    செந்தில் பாலாஜி

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தமிழ்நாடு செய்தி
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    செந்தில் பாலாஜியின் மனைவி வழக்கு: நீதிபதி விலகியதால் புதிய அமர்வு அறிவிப்பு தமிழகம்
    120 பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தணடனை  நாகர்கோவில்
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு

    உச்ச நீதிமன்றம்

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு!  இந்தியா
    5 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று - புதிய வழக்குகள் ரத்து!  கொரோனா
    WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா

    தமிழகம்

    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! இந்தியா
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 'பராசக்தி' படம் மறுவெளியீடு!  கருணாநிதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025