NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: 7 முறை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்திய அண்ணாமலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: 7 முறை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்திய அண்ணாமலை
    சாட்டையால் அடித்து போராட்டம் நடத்திய அண்ணாமலை

    தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: 7 முறை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்திய அண்ணாமலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 27, 2024
    11:22 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று கூறியது போலவே, கோயம்புத்தூர் காளப்பட்டி சாலையில் உள்ள தனது வீட்டின் முன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தினார்.

    பச்சை வேட்டி அணிந்து, மேல் சட்டை அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்த அண்ணாமலை, கயிறால் செய்யப்பட்ட சாட்டையால் தன்னைத் தானே அடித்து கொண்டார்.

    ஏழு முறை சாட்டையால் தன்னைத் தானே அடித்தபின், எட்டாவது முறை அடிக்கும் போது பா.ஜ.க.வினர் அவரை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். கசியவிடப்பட்டதற்கு காவல்துறையின் கவனக்குறைவு காரணம் என குற்றம் சாட்டினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    சாட்டையை சுழற்றி ஓங்கி ஓங்கி தன்னைத்தானே 6 முறைக்கும் மேல் அடித்துக்கொண்ட அண்ணாமலை.. சொன்னதை செய்தார்..#Covai | #BJP | #Annamalai | #AnnaUniversity | #PolimerNews pic.twitter.com/1xUyOa6PXQ

    — Polimer News (@polimernews) December 27, 2024

    போராட்டம்

    மன்மோகன் சிங்கின் மறைவை ஒட்டி போராட்டம் வாபஸ்

    மேலும், "நேற்றே என் காலணியை கழற்றிவிட்டேன். திமுக ஆட்சியிலிருந்து இறக்காமல் நான் காலணி அணியப்போவதில்லை" என்றார்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மரணத்தையொட்டி பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் திட்டமிட்டிருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்படும் என்றும் கூறினார்.

    தமிழ்நாடு போலீசாரின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்.ஐ.ஆர் கசியவிடப்பட்டது என தமிழக காவல்துறை அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த அண்ணாமலை, முன்னாள் போலீஸ் அதிகாரி என்ற முறையில், எஃப்.ஐ.ஆர் கசியவிடுவது கண்டிப்பாக இதன் காரணமாக சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.

    மேலும் இந்த சட்டையடியை கடவுளுக்கு சமர்ப்பித்து திமுகவிற்கு எதிராக போராட்டம் தொடரும் என அறிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அண்ணாமலை
    அண்ணா பல்கலைக்கழகம்
    திமுக
    கோயம்புத்தூர்

    சமீபத்திய

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை
    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் இந்தியா

    அண்ணாமலை

    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  தேமுதிக
    திமுக பைல்ஸ் 2 - தமிழக ஆளுநரிடம் ஒப்படைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  ஆர்.என்.ரவி
    அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழா: கொடியசைத்து துவக்கி வைக்கிறார் அமித்ஷா அமித்ஷா
    ஓ.பன்னீர் செல்வத்தினை ஒதுக்கவில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஓ.பன்னீர் செல்வம்

    அண்ணா பல்கலைக்கழகம்

    பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்  பள்ளி மாணவர்கள்
    பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை., பொறியியல்
    பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள் பொறியியல்
    அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு; அடுத்தாண்டு அமல் தேர்வு

    திமுக

    நாடாளுமன்ற தேர்தல்: திமுக- காங்கிரஸ்- மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு  நாடாளுமன்றம்
    தேர்தல் 2024: விசிக தலைவர் தொல். திருமா சிதம்பரத்தில் போட்டியிடுகிறார் தொல். திருமாவளவன்
    "திமுக '5ஜி' குடும்ப ஆட்சி": பிரதமர் மோடி பிரச்சார உரை பிரதமர் மோடி
    'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக தேர்தல்

    கோயம்புத்தூர்

    மெட்டா நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை.. கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு! மெட்டா
    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் தமிழ்நாடு
    சைபர் கிரைம்: பார்ட்-டைம் வேலையால் 16 லட்சத்தை இழந்த கோவை பெண் சைபர் கிரைம்
    தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் விலகல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025